Published : 31 Aug 2025 09:07 AM
Last Updated : 31 Aug 2025 09:07 AM

ப்ரீமியம்
திண்ணை: புத்தகப் பூங்காவில் சொற்பொழிவு  

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில், சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள சென்னைப் புத்தகப் பூங்கா அரங்கில், செப்டம்பர் 2ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு சிறப்புச் சொற்பொழிவு மற்றும் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. எழுத்தாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன், ‘தொன்மை மறவேல்’ என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்.

ராஜம் கிருஷ்ணன் நூற்றாண்டுக் கருத்தரங்கம்: சாகித்திய அகாடமியும், மதுரை கருமாத்தூர்,அருள் ஆனந்தர் கல்லூரியின் தமிழ்த் துறையும் இணைந்து நடத்தும் ராஜம் கிருஷ்ணன் நூற்றாண்டுக் கருத்தரங்கம் செப்டம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அருள் ஆனந்தர் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இக்கருத்தரங்கில், ராஜம் கிருஷ்ணனின் படைப்புகள் பற்றி, பல்வேறு தலைப்புகளில் ஆறு அமர்வுகளில் உரையாடல்கள், விவாதங்கள் நடைபெறவுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x