Published : 30 Aug 2025 07:23 AM
Last Updated : 30 Aug 2025 07:23 AM
கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டை முன்னிட்டு (1925-1965) அவரது மொத்தப் படைப்புகளையும் பேராசிரியர் வீ. அரசு, ஆறு தொகுதிகளாகத் திரட்டிப் பதிப்பித்துள்ளார். கவிதைகள், காவியங்கள், சிறார் பாடல்கள், சிறார் கதைகள், சிறுகதைகள், ஓரங்க நாடகங்கள், ஆய்வுரைகள், கட்டுரைகள், தன்வரலாறு என வெவ்வேறு வகைமைகளில் தமிழ்ஒளி எழுதியுள்ளார். நாற்பத்தோரு வருடங்கள் மட்டுமே வாழ்ந்த தமிழ்ஒளி ஏறக்குறைய மறக்கப்பட்டு விட்டார் என்றே கூறலாம். தமிழ்ஒளியின் அன்பரான செ.து.சஞ்சீவி (1929-2023) தன் வாழ்நாள் முழுக்கத் தமிழ்ஒளியின் படைப்புகளைத் திரட்டி வெளியிடுவதையே அரும்பணியாகக் கருதிச் செய்து வந்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT