Published : 09 Aug 2025 07:15 AM
Last Updated : 09 Aug 2025 07:15 AM

ப்ரீமியம்
நல்லகண்ணு ஒரு வரலாறு | நூல் வெளி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு இது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணுவுக்கும் இது நூற்றாண்டு ஆகும். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தோற்றுவிக்கப்பட்ட 1925 டிசம்பர் 25ஆம் தேதிதான் நல்லகண்ணுவும் பிறந்திருக்கிறார். வேறு எந்த அரசியல் தலைவரின் வாழ்விலும் அமைந்திராத அரிய ஒற்றுமை இது.

ஆர்​.நல்​ல​கண்​ணு​வின் பெருமை மிகுந்த வாழ்க்​கைத் தடத்​தை, ‘அற​வாழ்​வின் அடை​யாளம்’ என்ற தலைப்​பில் ‘இந்து தமிழ் திசை’ பதிப்​பகம் நூலாக வெளி​யிட்​டுள்​ளது. கம்​யூனிஸ்ட் கட்சி பிறந்த நாளில் பிறந்​தவ​ரான நல்​ல​கண்​ணு​வின் குடும்​பம், கம்​யூனிஸ்ட் இயக்​கக் குடும்​பம் அல்ல. விடு​தலைப் போராட்​டத்​தின் எழுச்​சி​யால் உந்​தப்​பட்ட ஆர்​.நல்​ல​கண்​ணு, பள்ளி மாணவ​னாக இருந்த காலத்​தில் இந்​திய தேசிய காங்​கிரஸ் இயக்​கத்​தில் தன்னை இணைத்​துக்​கொண்​டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x