Published : 26 Jul 2025 07:09 AM
Last Updated : 26 Jul 2025 07:09 AM

‘தமிழன் என்பற்காகவே ஒரு நாடு நிராகரித்ததைத் தாங்க முடியவில்லை’ - ‘படுபட்சி’ நாவலாசிரியர் டிலுக்ஸன் மோகன் நேர்காணல்

ஒரு த்ரில்​லர் திரைப்​படத்​தைப் பார்க்​கும் பரபரப்​புட​னும் அடுத்​தது என்ன என்​கிற எதிர்​பார்ப்​புட​னும் வாசகனை ஆழமாக​வும் அதிர்ச்​சி​யுட​னும் இழுத்​துச் செல்​கிறது, இலங்​கையைச் சேர்ந்த டிலுக்​‌ஸன் மோகன் எழ​தி​யிருக்​கும் ‘படு​பட்​சி’ நாவல். புனை​வும் தன் வரலாறும் கொண்ட ‘ஆட்​டோ பிக் ஷன்’ வகை நாவலான இது, இலங்​கை​யின் முதல் விமானத்தை உரு​வாக்க நினைத்த தமிழ் இளைஞனின் கனவை​யும் அக்​க​னவு சுக்​குநூறாக உடைந்த வலியை​யும் பேசுகிறது. இந்​நூலின் வெளி​யீட்டு விழா சென்​னை​யில்
இன்று நடக்க இருக்​கும் நிலை​யில், இந்​நாவலாசிரியர் டிலுக்​ஸன் மோக​னிடம் உரை​யாடினோம்.

‘படு​பட்​சி’யை எங்​கிருந்து தொடங்​கினீர்​கள்? - எங்கே என் வாழ்க்​கை​யும் கனவும் நிராகரிக்​கப்​பட்​டதோ, எங்கே என் வலி என்​னைத் துரத்​திக் கொண்டே இருந்​ததோ, என் ஆதங்​கம் எப்​போது கேள்விக் கேட்​கத் தொடங்​கியதோ அங்​கிருந்​து​தான் ‘படு​பட்​சி’ தொடங்​கியது. தமிழன் என்​கிற ஒரே காரணத்​துக்​காக ஓர் இளைஞனின் கனவை, ஆசையை, ஒரு நாடு நிராகரித்​ததைத் தாங்க முடிய​வில்​லை. எனக்கு என்ன நடந்​தது என்​ப​தன் மூலம் தமிழர்​களுக்கு என்ன நடந்​தது என்​பதை உலகுக்​குச் சொல்​லும் முயற்​சி​தான் இது.

அதை விளக்​க​மாகச் சொல்​லலா​மா? - அப்​பாவுக்கு நான் விமானி​யாக வேண்​டும் என்று ஆசை. ஊரில் எங்​காவது யாரை​யா​வது பார்த்​தால், என் மகன் பைலட்​டாக போகிறான் என்​று​தான் சொல்​வார். சிறு​வய​திலேயே அது என் மனதில் பதிந்​து​விட்​டது. பிறகு எனக்கு விமானம் தயாரிக்​கும் ஆசை ஏற்​பட்​டது. இலங்​கை​யில் இருக்​கிற விமானங்​கள் அனைத்​தும் ‘அசம்​பிள்’ பண்​ணி​யது.

அங்கு தயாரித்​தது அல்ல. அதனால் இலங்​கை​யின் முதல் விமானத்தை நான்​தான் தயாரிக்க வேண்​டும் என்ற ஆசை வந்​தது. பிறகு அது என் கனவாக​வும் மாறியது. ஏரோ​நாட்​டிக்​கல் என்​ஜீனியரிங் கல்​லூரி​யில் சேர்ந்​தேன். என் வகுப்​பில் நான் மட்​டுமே தமிழ் மாணவன். பாடப்​புத்​தகங்​கள் ஆங்​கிலத்​தில் இருந்​தா​லும் சிங்​களத்​தில்​தான் பாடம் எடுப்​பார்​கள்.

எனக்​குச் சிங்​களம் தெரி​யாது. சுய​மாக படித்து தயார்ப்​படுத்​திக் கொண்​டேன். ஒரு விமானம் உரு​வாக்​கு​வதற்​கான அனைத்​தை​யும் தெரிந்​து​கொண்​டேன். அது தொடர்​பாகப் பேராசிரியர்​கள் முன் நடத்​திக் காட்​டிய ‘பவர்​பா​யின்ட் பிரசன்​டேஷன்’ அவர்​களுக்கு ஆச்​சரி​யத்தை ஏற்​படுத்தி இருக்க வேண்​டும். பிறகு 40 நிமிடம் அவர்​கள் தனி​யாக விவா​தித்​து​விட்​டு,“அனு​மதி வழங்க மாட்​டோம்” என்​றார்​கள்.

“ஏன்?” என்​றேன். “நீ தமிழன். இதை விடு​தலைப் புலிகளுக்​காகத் தயாரிக்க இருக்​கிறா​யா? அவர்​கள்​தான் படிக்க வைக்​கிறார்​களா?” என்று கேட்​டார்​கள். என் கனவு ஆரம்​பத்​திலேயே சிதைந்​தது. இது முடிந்த மறு​நாள், புல​னாய்​வுத் துறை​யின​ரால் கடத்​தப்​பட்டு ‘நான்​காவது மாடி’க்குக் கொண்டுச் செல்​லப்​பட்​டேன். அது ஒரு சித்​தர​வதை. அதை எப்​படி விளக்​கி​னாலும் மற்​றவர்​களால் ஓரளவுக்​குத்​தான் புரிந்து கொள்ள முடி​யும். அதை அனுப​வித்​து, உயிரோடிருப்​பதே பெரிய விஷ​யம்.

‘புலிகளுக்​காக விமானம் தயாரித்​து, எங்கே குண்டு போடப் போகிறீர்​கள்?’ என்​கிற ஒரே கேள்​வியை நான்கு நாட்​களாகத் திரும்​பத் திரும்​பக்கேட்டு சித்​தர​வதைச் செய்​தார்​கள். இதே போல பல ரணங்​கள், கொடுமை​கள். பிறகு இலங்​கை​யில் இருந்து தப்பி ஆஸ்​திரேலி​யா​வுக்கு அகதி​யாகச் சென்​றேன். இப்​படி சொல்​லிக் கொண்டே போக முடி​யும். அந்த வலிகள்​தான் இதை எழுதத் தூண்டியது.

அப்​படின்னா நாவலில் எது புனை​வு, எது புனை​வல்​லாதது? - பெரும்​பாலும் தன் வரலாறு​தான். நான் படிப்​ப​தற்​கும் இலங்​கை​யின் முதல் விமானத்​தைத் தயாரிக்க வேண்​டும் என்ற என் கனவுக்கும் ஆதா​ர​மாக இருந்​தது, என் அம்​மா. இதற்​காக பல சொத்​துகளை விற்​றார். ஆனால், அவருக்​குக் காது கேட்​காது, வாய் பேச முடி​யாது. அவரை இந்த நாவலில் பேச வைத்​திருக்​கிறேன்.

என் அம்மா பேசி​னால் அவர் பட்ட கஷ்டங்​களை​யும் துன்​பங்​களை​யும் எப்​படிச் சொல்​லி​யிருப்​பார் என்​பதை இதில் கூறி​யிருக்​கிறேன். அதோடு கம்​பீர​மான அம்​மா​வாக​வும் அவரை உலவ விட்​டிருக்​கிறேன். இது போல ஆஸ்​திரேலி​யா​வில் நடக்​கும் சில விஷ​யங்​கள், காலத்தை முன் பின் மாற்​றியது புனை​வாக இருக்​கும்.

‘புலிகளிடம் கைப்​பற்​றிய விமானம்’ என்று நீங்​கள் தயாரித்த விமானத்தை இலங்கை விமானப்​படை, காட்​சிக்கு வைத்​திருப்​ப​தாக நாவலில் கூறி​யிருக்​கிறீர்களே... அது உண்​மை​தா​னா? - உண்​மை​தான். விமானம் தயாரிக்​கக் கூடாது என்று கடுமை​யாக மிரட்​டிய பிறகும் யாருக்​கும் தெரி​யாமல் ஒரு விமானத்​தைத் தயாரித்​தேன். ஒரு கட்​டத்​தில் அதைத் தெரிந்​து​கொண்டு என்​னைப் பிடித்​துச் சித்​தர​வதை செய்​தார்கள். பிறகு நான் தயாரித்து மறைத்து வைத்​திருந்த விமானத்தை அவர்​கள் கைப்​பற்​றிச் சென்​றார்​கள்.

அதைத்​தான் அவர்​கள் வைத்​திருக்​கிறார்​கள். ரத்​ம​னாலை என்ற இடத்​தில் உள்ள இலங்கை விமானப்​படை தளத்​தில் விடு​தலைப் புலிகளிடம் இருந்து கைப்​பற்​றப்​பட்ட விமானம் ஒன்​றை​யும் நான் தயாரித்த விமானத்​தை​யும் வைத்​திருக்​கிறார்​கள். அது என்​னுடையது என்​பது அவர்​களுக்கே தெரி​யும்.

‘பஞ்ச பட்​சி’ என்று சொல்​லப்​படு​கிற ஐந்து பறவை​களின் பெயரை ‘படு பட்​சி’ என்​பார்​கள். நீங்க இந்த தலைப்​பைத் தேர்வு செய்ய காரணம் என்ன? - நான் இந்த நாவலை எழுதி முடித்​ததும் எழுத்​தாளர் ஷோபா சக்​தி​யிடம் கொடுத்து வாசிக்​கச் சொன்​னேன். அவருடைய எழுத்​துகள் எனக்​குப் பிடிக்​கும். அவர் இந்​நாவலை எடிட் செய்து தரு​வ​தாகச் சொன்​னார்.

இந்த தலைப்​பைத் தேர்வு செய்​ததும் அவர்​தான். நான் ‘காகித விமானம்’ என்று தலைப்பு வைத்​திருந்​தேன். பறக்​காத பறவை என்​றும் இதற்​குப் பொருள் கொள்​ளலாம். இதே நாவல் ஆங்​கிலத்​தி​லும் வர இருக்​கிறது. அதற்கு ‘பேப்​பர் பிளேன்’ என்றே தலைப்பு வைத்​திருக்​கிறேன்.

யுத்​தத்​துக்​குப் பிறகு வரு​கிற ஈழ எழுத்​தாளர்​களின் படைப்​பு​கள் இன்​னும் அங்கு நடந்த வேதனை​களையே பேசுகின்​றன. இப்​போது அங்கு இருக்​கும் நிலைமை பற்றி... இப்போதும் அங்கு நிலைமை என்ன மாறி​விட்​டது? பயங்​கர​வாதத் தடுப்​புச் சட்​டத்தின் கீழ் கைது செய்​யப்​பட்ட என் அப்​பா, சமீபத்​தில்​தான் விடு​தலை செய்​யப்​பட்​டிருக்​கிறார்.

புலிகள் இயக்​கத்தை மீள் உரு​வாக்​கம் செய்ய திட்​ட​மிட்​ட​தாகச் சொல்லி கைது செய்​தார்​கள். இப்​போதும் அங்கு பழைய நிலை​மை​தான் இருக்​கிறது. குண்​டு, துப்​பாக்​கிச் சத்​தங்​கள் மட்​டும் கேட்​க​வில்​லையே தவிர மற்ற நிலைமை அப்​படியே​தான் இருக்​கிறது.

அடுத்து என்ன எழுதுகிறீர்​கள்? - பெரு நாட்​டின் பின்​னணி​யில் ஒரு நாவலை ஆங்​கிலத்​தில் எழு​திக் கொண்​டிருக்​கிறேன். என் ‘கேர்ள் பிரண்ட்’ பெரு நாட்​டைச் சேர்ந்​தவர். அவருடன் அங்கு சென்​றிருக்​கிறேன். அங்​குள்ள மனிதர்​களின் கஷ்டம் எனக்கு இலங்​கை​யில் இருக்​கும் உணர்​வைத் தந்​தது.

அதனால் அதன் பின்​னணி​யில் நாவல் எழுதுகிறேன். அங்கு மனித கடத்​தல் எப்​படி நடக்​கிறது, அவர்​கள் எப்​படி அமெரிக்கா​வுக்​குள் நுழைகிறார்​கள் என்​கிற பின்​னணியிலான கதை​யாக இருக்​கும்.

அத்​துடன் இன்​னொரு லட்சி​ய​மும் இருக்​கிறது. எந்த நாடு இலங்​கை​யின் முதல் வி​மானத்​தைத் தயாரிக்கும் கனவைச் சிதைத்​ததோ, அதே நாடு இவன் இலங்​கையைச் சேர்ந்​தவன் என்​று பெரு​மை​யாகச்​ சொல்​கிற ஒரு விஷ​யத்​தைச்​ செய்ய இருக்​கிறேன்​. என்​னை விரட்​டிய நாடே அதன்​பிறகு மரி​யாதை​யுடன்​ அழைக்​கும்​ என நம்​புகிறேன்​. அதுவரை அதற்​காகப்​ போ​ராடுவேன்.

படு​பட்சி
டிலுக்​ஸன் மோகன்
கருப்புப் பிரதிகள் வெளியீடு, சென்னை.
விலை: ரூ.250
தொடர்புக்கு: 94442 72500

- தொடர்​புக்கு: egnathraj.c@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x