Published : 26 Jul 2025 06:59 AM
Last Updated : 26 Jul 2025 06:59 AM
தேசியக் கல்விக்கொள்கை 2020 என்பது கல்வியை அரசியலாகப் பார்க்கும், கல்வியில் அரசியல் செய்ய முற்படும் பிரிவினரால் எழுதப்பட்டது. இது மனித குலத்திற்கு எதிரானது; சமூக நீதிக்கு எதிரானது; அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது; மதத்தின் பெயரால் மனிதர்களைப் பிரித்து, அடிமைப்படுத்தி, நசுக்க நினைக்கும் மதம்பிடித்த யானைகளை ஒத்தது என்பதை ‘தேசிய கல்விக் கொள்கை – 2020 எனும் மதயானை’ என்ற நூல் அறிவுப்பூர்வமாக நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றது.
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இந்நூலை எழுதியுள்ளார். மொத்தம் 14 தலைப்புகளில், 135 பக்கங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவில் கல்விக்கான வளர்ச்சிக் கட்டமைப்பில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டின் அணுகுமுறையைப் பின்பற்றினால் கல்வியில் அடையவேண்டிய இலக்கை ஒட்டுமொத்த இந்திய தேசமும் அடைந்துவிடலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT