Published : 20 Jul 2025 09:20 AM
Last Updated : 20 Jul 2025 09:20 AM
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து நடத்தும் 2025ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா சிவகாசி காளீஸ்வரி ஆர்ச்சிட்ஸ் அரங்கில் 20-07-2025 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. முனைவர் மே.து.ராசுகுமார், பேராசிரியர் வீ.அரசு, திருச்சி லெனின், பால.சிவகடாட்சம், அய்யாறு ச.புகழேந்தி, பேராசிரியர் அ.ராமசாமி, அன்பாதவன், மதிகண்ணன், ஈரோடு சர்மிளா, கன்யூட்ராஜ், மு.ந.புகழேந்தி, முனைவர் லோகமாதேவி, ஆர்.பி.அமுதன், ராம்போ குமார், சந்திரமோகன் உள்ளிட்டோர் விருது பெறுகின்றனர். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேராசிரியர் சாலமன் பாப்பையா, சென்னை மாநகராட்சி இணை ஆணையர் வீ.ப.ஜெயசீலன், கலை இலக்கியப் பெருமன்ற நிர்வாகிகள் எஸ்.கே.கங்கா, மருத்துவர் த.அறம் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT