Published : 14 Jul 2025 06:04 AM
Last Updated : 14 Jul 2025 06:04 AM

சோம வீரப்​பனுக்கு ‘சிறந்த எழுத்​தாளர்’ விருது

பெங்​களூரு​வில் நடை​பெற்ற நகரத்​தார்​களின் சர்​வ​தேச வர்த்தக மாநாட்​டில் எழுத்​​தாளர் சோம வீரப்​பனுக்கு ‘சிறந்த எழுத்​​தாளர்’ விருது வழங்​கப்​பட்​டது.

சென்னை: எழுத்​தாளர் சோம வீரப்​பனுக்கு ‘சிறந்த எழுத்​தாளர்’ விருது வழங்​கப்​பட்​டது. நகரத்​தார்​களின் சர்​வ​தேச வர்த்தக மாநாடு பெங்​களூரு​வில் கடந்த 11-ம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்​தது.

இதையொட்​டி, நேற்று முன்​தினம் மாலை நடை​பெற்ற விழா​வில், சிறந்த ஸ்டார்ட் அப், சிறந்த குடும்ப நிறு​வனம், வாழ்​நாள் சாதனை​யாளர் உள்​ளிட்ட விருதுகள் வழங்​கப்​பட்​டன. மேலும், எழுத்​தாளர் சோம வீரப்​பனுக்கு ‘சிறந்த எழுத்​தாளர்’ விருது வழங்கப்பட்​டது.

திருக்​குறளில் உள்ள மேலாண்மை கருத்​துகள் குறித்​தும், சாணக்​கியரின் பொன்​மொழிகள் குறித்​தும் அவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் தொடர்ந்து நான்​கரை ஆண்​டு​கள் 226 கட்​டுரைகளை எழு​தி​யுள்​ளார். அவரது ‘குறள் இனிது ’ நூல் தமிழ் மட்​டுமின்​றி, ஆங்​கிலம், இந்​தி, பஞ்​சாபி, ஒடியா ஆகிய 5 மொழிகளில் வெளி​யாகி, சிறப்​பாக விற்​பனை​யாகிக் கொண்​டிருக்​கிறது. மேலும், விரை​வில் பிரெஞ்ச், குஜ​ராத்​தி, மலை​யாள மொழிகளி​லும் வெளி​யாக உள்​ளது.

பல்​வேறு மாநிலங்​கள் மற்​றும் வெளி​நாடு​களில் 8 மொழிகளில் ‘வள்​ளுவர் உலகின் மூத்த மேலாண்​மைக் குரு’ எனும் கருத்தை கொண்​டு ​சென்று சேர்த்​துள்​ளார். இந்த மாநாட்​டில் இந்​தியா மட்​டுமின்​றி, அமெரிக்​கா, ஆஸ்​திரேலி​யா, இங்​கிலாந்​து, துபாய், மலேசியா போன்ற நாடு​களில் இருந்து 600-க்​கும் மேற்​பட்ட பிர​தி​நி​தி​கள் கலந்​து​கொண்​டனர்.

அவர்​களுக்கு எழுத்​தாளர் சோம வீரப்​பன் எழு​திய “Trusting & Entrusting” என்ற ஆங்​கில நூல் வழங்​கப்​பட்​டது. நிகழ்ச்சியில், ஐபிசிஎன் தலைவர் விப்ரோ ரவி வீரப்பன், மருத்துவர் பால், சொக்கு வள்ளியப்பன், விசாலாட்சி, சித்தார்த், அக் ஷரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x