Published : 12 Jul 2025 07:41 AM
Last Updated : 12 Jul 2025 07:41 AM
அறிவியல் என்றாலே கண்டு பிடிப்புகள் எனச் சுருக்கிப் புரிந்து கொள்ளலாகாது. அனைத்தையும் அறிவியல்பூர்வமாக அணுகி, அலசி, ஆராய்வது அறிவியலின் முக்கிய பண்பாகும். புதிய கண்டுபிடிப்புகள் தலையெடுக்க இந்த பண்புதான் அத்தியாவசியமானதும் கூட. இந்தக் கண்ணோட்டத்தில், மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மையை ஊட்ட, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் பள்ளி நாளிதழான ‘வெற்றிக்கொடி’யில் எழுதப்பட்ட தொடர்தான், ‘புதுமை புகுத்து’.
அறிவியல் என்பது நிலையான ஒரு முடிவு அல்ல; அது தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கும், ஒரு வளர்ந்து வரும் அறிவின் பயணம். இந்தப் பயணத்தில் புதிய கண்டுபிடிப்புகளும், ஆராய்ச்சிகளும் தினமும் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. இந்தியா முழுவதும் உள்ள தமிழ் வாசகர்களுக்கு நவீன அறிவியலின் சுவாரஸ்யமான ஆய்வுகளை எளிய தமிழில் எடுத்துரைக்கும் ஒரு முயற்சியாக “புதுமை புகுத்து” என்ற இந்தத் தொடர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் பிரசுரமானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT