Published : 05 Jul 2025 07:15 AM
Last Updated : 05 Jul 2025 07:15 AM
மனிதர்களின் சிந்தனை அவரவர் தாய்மொழியில்தான் நிறைவாக அமையும் என்பதற்கு வலுசேர்க்கும் வகையிலும் மருத்துவ நூல்களைத் தமிழில் எழுதுவது சாத்தியமே என்பதை மெய்ப்பிக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது ‘தலைக்காயம்’ நூல். இந்த நூலை எழுதியிருக்கும் மரு. ஆ. திருவள்ளுவன், அரசுப் பள்ளியில் தமிழ்வழியில் பயின்றவர். சென்னை மருத்துவக் கல்லூரி நரம்பியல் அறுவை சிகிச்சை கழகத்தின் இயக்குநராகப் பணியாற்றிய இவர், தலைக்காயம் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு பெறவும் மூளை உள்ளிட்ட சிக்கலான உறுப்புகள் குறித்து அனைவரும் அறிந்துகொள்ளும் நோக்கிலும் எளிய நடையில் இந்த நூலை எழுதியிருக்கிறார். படங்களுடன் கூடிய விரிவான விளக்கங்கள் மருத்துவத் துறை சார்ந்தவர்களுக்கு உதவும். பள்ளி மாணவர்களோடு அறிவியலில் ஆர்வம் உள்ளவர்களும் இந்த நூலை வாசிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT