Published : 21 Jun 2025 07:37 AM
Last Updated : 21 Jun 2025 07:37 AM

ப்ரீமியம்
எது சப்தம், எது இசை? | ஜூன் 21 இசை நாள்

கவிஞர் ரோஸ்முகிலனின் 'சத்தத்துல சங்கீதம் இருக்கு/அதைக்/கேக்கத்தான் நெஞ்சத்துல/ கிறுக்கு' என்கிற பாடலைக் கரிசல் கருணாநிதியின் குரலில் கேட்டுள்ளேன். கேட்பதற்கு இனிமையாகவும் இதமாகவும் இருக்கிற ஒலிகளை இசை எனவும், ஒழுங்கற்ற ஒலிகளைச் சத்தம் எனவும் பெரும்பாலானோர் குறிப்பிடுவர்.

ஒழுங்குசெய்யப்பட்ட ஒலியில் எவரும் லயித்திருக்க முடியும். ஒழுங்கற்ற சத்தத்திலும் ஒருவர் லயித்திருக்க முடியுமா? மகாகவி பாரதியார், தன் வீட்டில் அமர்ந்திருந்தபோது, தான் கேட்ட சத்தங்கள், ஓசைகள், ஒலிகள், நாதங்கள், குரல்களை இவ்வாறு வரிசைப்படுத்தியுள்ளார்: ‘வீதிகளில் குழந்தைகள் விளையாடுகிற சத்தம், வண்டிச் சத்தம், பக்கத்து வீட்டு வாசலில் விறகு பிளக்கிற சத்தம், நான்கு புறத்திலும் காக்கைகளின் குரல், இடையிடையே குயில், கிளி, புறாக்களின் ஓசை, வாசலிலே காவடி கொண்டு போகும் மணியோசை, தொலைவில் இருந்து வரும் கோவில் சங்கின் நாதம், தெருவிலே சேவலின் கொக்கரிப்பு, நடந்து போகும் பெண்களின் பேச்சொலி, அண்டை வீடுகளில் குழந்தைகள் அழுகிற சத்தம், நாராயணா கோபாலா என்று ஒரு பிச்சைக்காரனின் குரல், கதவுகள் அடைத்துத் திறக்கிற ஒலி, நாய் குலைக்கும் சத்தம், வீதியில் தொண்டையை லேசாக்கி இருமித் திருத்திக்கொள்ளும் சத்தம், தொலைவிலே காய்கறி விற்பவனின் சத்தம், அரிசி அரிசி என்று அரிசி விற்பவனின் ஒலி, இப்படிப் பலவிதமான ஒலிகள் ஒன்றன்பின் ஒன்றாக என் செவியில் பட்டுக்கொண்டேயிருக்கின்றன’.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x