Published : 29 Apr 2025 07:40 AM
Last Updated : 29 Apr 2025 07:40 AM

ப்ரீமியம்
கிருஷ்ணமூர்த்தி வாத்தியார் ஏன் இப்படிச் செய்தார்? | அகத்தில் அசையும் நதி 15

பள்ளிக்கு வந்ததும் முதல் வேலை யாகப் பழைய பதிவேடுகளை எடுத்துப்போட்டுத் தேடத்தொடங்கினார் ரேவதி டீச்சர். இந்தப் பள்ளிக்கு வந்தது முதல் ஆசிரியர்களுக்கான இந்தப் பழைய வருகைப் பதிவேடுகளை இதுவரை எடுத்துப் பார்த்ததில்லை. அதற்கான அவசியமும் ஏற்பட்டதில்லை. இந்தப் பதிவேடுகளில் இருந்து இதற்குமுன் பணியாற்றிய ஆசிரியர்களின் விவரங்களை எடுப்பது அப்படி ஒன்றும் சிரமமான வேலையுமில்லை. இந்த கிருஷ்ணமூர்த்தி உண்மையான ஆள்தானா என்பது இன்னும் சில நிமிடங்களில் தெரிந்து விடும்.

பதிவேடுகள் வருடக்கணக்கில் கட்டப்பட்டுக் கிடந்த அழுத்தத்தினால் தாள்கள்பழுப்பேறித் தடித்து மொறமொறத்துப் போயிருந்தன. கை பட்டாலே உடைந்துபோவது போலிருந்ததால் ஒவ்வொரு ஏடாக மெல்லப் புரட்டிக்கொண்டு வந்தார். ஒரு பதிவேட்டில் பாதிக்குமேல் ஏடுகளைப் புரட்டிய பிறகு ஆகஸ்ட் மாதத்திற்கான பக்கத்தில் ‘ப.கிருஷ்ணமூர்த்தி, தலைமையாசிரியர்’ என்று எழுதப்பட்டுக் கையொப்பமிடப்பட்டு இருந்தது. அதிலிருந்து தொடர்ச்சியாக அடுத்தடுத்த மாதங்களில் அடுத்தடுத்த பதிவேடுகளில் அவர் இந்தப் பள்ளியின் தலைமையாசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார் என்பது தெரிந்தது. ஆனால், இந்த ஆறுபேருக்குமான சான்றிதழ் வழங்கப்பட்ட தேதியில் அவர் அப்பள்ளியிலும் இல்லை; பணியிலும் இல்லை. முன்ன தாகவே பணி ஓய்வு பெற்றிருந்தார். பேரையும் முத்திரையையும் மட்டும் வைத்துக்கொண்டு ஓய்வுபெற்று பத்தாண்டுகளுக்குப் பிறகும் இவர் இந்த வேலையை எப்படிச் செய்யலாம்? மனதிற்குள் சிறியதொரு சீற்றம் ஏற்பட்டது ரேவதி டீச்சருக்கு. கிருஷ்ணமூர்த்தி வாத்தியாரை நேரில் பார்த்து நாலு வார்த்தை கேட்டால்தான் மனம் ஆறும் என்று நினைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x