Published : 26 Apr 2025 07:43 AM
Last Updated : 26 Apr 2025 07:43 AM

ப்ரீமியம்
அழுத்தமான வாழ்க்கையைப் பேசும் நாவல்! | நூல் வெளி

​நாம் நடந்து செல்​கிற தெரு​வோ, ஒரு சாலை​யோ, பாழடைந்து கிடக்​கும் கட்​டிடங்​களோ, காற்​றில் எழுந்து வரு​கிற புழு​தி​களோ, நம் முந்​தைய வரலாற்​றை, வாழ்க்​கை​யை, வென்​ற/வெல்​லாத கனவு​களைப் புதைத்தே வைத்​திருக்​கின்​றன. அதைத் தோண்ட, தோண்ட வரு​கிற சுவாரசி​யங்​கள், ஆச்​சரி​யங்​களாகவோ, அதி​யசங்​களாகவோ இருக்​கலாம். கவிஞர் கலாப்​ரி​யா​வின் நான்​காவது நாவலான ‘மாக்​காளை’ அப்​படி​யான, நினை​வு​களைக் கிளறும் உணர்​வை, தாமிரபரணி​யின் குளிர்ச்​சி​யோடு தரு​கிறது.

திருநெல்​வேலி திரையரங்​கம் ஒன்​றின் பின்​னணி​யைக் கொண்ட இந்த நாவல், 1960களில் நடக்​கிறது. இன்​றைக்​குள்ள தலை​முறை கண்​டி​ராத, வாழ்ந்​தி​டாத வாழ்க்​கையை அங்​கத​மாக​வும் அழுத்​த​மாக​வும் பேசுகிறது. அந்​தக் கால​கட்​டத்து மக்​களின் பழக்க வழக்​கங்​கள், திரையரங்க நடை​முறை​கள், படம் பார்க்க முண்​டும் கூட்​டம், பெண்​கள் டிக்​கெட் கவுன்​டருக்​கான மவுசு, சினிமா விளம்​பரங்​கள், திரையரங்க கேண்​டின் வியா​பாரம், எம்​.ஜி.ஆரின் ‘படகோட்​டி’, ‘எங்க வீட்டு பிள்​ளை’ பட ரிலீஸ்​களின் போது நடந்த கொண்​டாட்​டம் முதல் அப்​போது வெளி​யான படங்​களுக்​கான வரவேற்பு எனச் செல்​லும் தகவல்​களின் வழி, வாழ்ந்து கெட்ட அல்​லது வாழ்​வைத் தொலைத்த விஸ்​வ​நாத அண்​ணாச்​சி​யின் கதையை, எந்​தப் பாசாங்​கின்​றி​யும் விவரிக்​கிறது, நாவல்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x