Published : 18 Apr 2025 06:29 AM
Last Updated : 18 Apr 2025 06:29 AM

தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பாடுபடும் தமிழவன், திருநாவுக்கரசுக்கு மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள்

சென்னை: தமிழ் இலக்​கிய வளர்ச்​சிக்​காக பாடு​பட்டு வரும் பேராசிரியர் தமிழ​வன், ப.திரு​நாவுக்​கரசு ஆகியோ​ருக்கு மா.அரங்​க​நாதன் இலக்​கிய விருதை உச்ச நீதி​மன்ற நீதிபதி அரங்​க.ம​காதேவன் வழங்​கி​னார்.

‘முன்​றில்’ இலக்​கிய அமைப்பு சார்​பில் மா.அரங்​க​நாதன் இலக்​கிய விருது-2025 வழங்​கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலை​யில் உள்ள ராணி சீதை அரங்​கில் நடை​பெற்​றது. இதில் உச்ச நீதி​மன்ற நீதிபதி அரங்​க.ம​காதேவன் பங்​கேற்​று, தமிழ் இலக்​கிய வளர்ச்​சிக்​காக பாடு​பட்டு வரும் பேராசிரியர் தமிழ​வன், ப.திரு​நாவுக்​கரசு ஆகியோ​ருக்கு ‘மா.அரங்​க​நாதன் இலக்​கிய விருது’ வழங்கி கவுர​வித்​தார். தொடர்ந்து ‘மா.அரங்​க​நாதன்’ மற்​றும் ‘முன்​றில்’ ஆகிய வலை​தளங்​களை தொடங்​கி​வைத்​தார்.

பின்​னர், நிகழ்ச்​சி​யில் அவர் பேசி​ய​தாவது: மா.அரங்​க​நாதன் சிறுகதை எழுத்​தாளர் என்று மட்​டுமே பலர் அறிந்​திருந்​தா​லும் கவிதை பற்​றிய ஆழ்ந்த சிந்​தனையை அவர் கொண்​டிருந்​தார். ஒரு கவிதை​யின் உரு​வாக்​கம், வடிவம், அந்த கவிதை எவ்​வாறு படைக்​கப்​படு​கிறது, கவிதை என்​றால் என்ன, எது கவிதை என்று கேட்ட மாத்​திரத்​திலேயே கவிதை​யின் அம்​சம் மாறு​பட்டு விடும், அதிலிருந்து வெகு தூரம் பயணித்​து​விடும் என்​றெல்​லாம் பதிவு செய்​து, ‘பொருளின் பொருள் கவிதை’ எனும் அற்​புத​மான நூலை கவிதை உலகுக்கு மா.அரங்​க​நாதன் தந்​தார். அவரது படைப்​பு​களில் கூறிய விஷ​யம் சிறியது​தான்.
ஆனால், 2 வரி​களுக்கு உள்ளே படைப்​பின் உன்னதத்தை எடுத்​துக் காட்​டு​வார். கவிதை சார்ந்த கட்​டுரைகள் மட்​டுமின்​றி, உலக சினிமா மீது மிகுந்த ஈடு​பாடு கொண்​ட​வர்.

விரு​தாளர்​களுக்கு புகழாரம்: கிராமத்து இளைஞர்​களை தேடிப் பிடித்​து, ஆவண படங்​கள், குறும்​படங்​களை உரு​வாக்​கு​வது எப்​படி என்று பயிற்சி தந்​து, ஆயிரக்​கணக்​கான மாணவர்​களை உரு​வாக்கி திரைத்​துறை சார்ந்த ஆன்​மாவை வெளிப்​படுத்​தி​ய​வர் ப.திரு​நாவுக்​கரசு. ‘நிழல்’ என்ற அற்​புத​மான சிறு பத்​திரி​கையை உரு​வாக்​கி, அதன்​மூலம் திரைத்​துறை சார்ந்த சிந்​தனை​களை தமிழ் படைப்​புல​கம் எங்​கும் கொண்​டு​போய் சேர்த்​துள்​ளார்.

அதே​போல, மிகச்​சிறந்த படைப்​பு​களை தந்​ததன் மூலம், பேராசிரியர்​களின் பேராசிரிய​ராக அறியப்​படு​பவர் தமிழ​வன். தமிழகம் மட்​டுமின்​றி, பல்​வேறு பல்​கலைக்​கழகங்​களில் தனது அறி​வின் வீச்​சை, தனது ஆளு​மையை பல்​வேறு கல்​வி​யாளர்​களுக்கு புகுத்தி அதன் மூலம் புகழ்​பெற்​றவர். ‘தமிழும் பொறி​யியலும்’ என்​கிற அவரது நூல், ஆராய்ச்சி மாணவர்​களுக்கு அடிப்​படை நூலாக இருந்து வரு​கிறது. அவர் இந்த மண்​ணுக்​கான கொடை. அவர்​கள் இரு​வருக்​கும் இந்த விருதை வழங்​கு​வ​தில் பெருமை கொள்​கிறேன். இவ்​வாறு அவர் பேசி​னார். இந்த நிகழ்ச்​சி​யில் அறி​வியல் எழுத்​தாளர் சுஜாதா நடராஜன், கவிஞர்​கள்​ எஸ்​.சண்​முகம்​, ரவிசுப்​பிரமணி​யன்​ உள்​ளிட்​டோர்​ கலந்​துகொண்​டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x