Published : 01 Mar 2025 06:19 AM
Last Updated : 01 Mar 2025 06:19 AM

ப்ரீமியம்
இயல்பான மனிதர்களின் கதைகள் | நூல் நயம்

ஒரு பொது​வினா: ‘உல​கத்​தில் யாருக்​கும் நடக்​காததா உனக்கு நடக்​கிறது, நீ மட்டும் என்ன உசத்​தி?’. ‘ஆமாம், எனக்கு நான் உசத்தி​தான்’ என்று அடித்​துச் சொல்​பவர்கள் ‘அந்தி வானின் ஆயிரம் வெள்ளி’ தொகுப்​பின் கதை மாந்​தர்கள். ஒரு சறுக்​கலுக்​குப் பிறகு, புழு​தி​யில் வீழ்ந்த பிறகு, நிதானமாக எழுந்து, கை, கால் மூட்டு​களைத் தட்டி விட்டுக்​கொண்டு, சுற்றி நின்று பார்க்​கும், சிரிக்​கும் முகங்​களைப் பொருட்​படுத்தாமல், சறுக்கிய வழியிலேயே மீண்​டும் ஏறும் அபாய விரும்​பிகள் இவர்​கள்.

சில சமயங்​களில், முணு முணுத்​துக்​கொண்டோ, கண்ணீரைத் துடைத்​துக்​கொண்டோ, சேர்ந்து சிரித்​துக்​கொண்டோ, காப்​பியோ டீயோ ஒரு குவளையை கையில் ஏந்தித் திரும்பி ஏறும் வழியில் ஒரு துணைக்​கரம் நீள்​வதுண்டு. அப்படி நீளும் கரங்கள் இந்தக் கதைகளை உச்சிக்கு அழைத்​துச் செல்​கின்றன. பழ ஜூஸ் வாங்​கித் தர விரும்​பும் சவரி​யும், பக்கத்து வீட்டுக்​குள் வந்து காப்பி கலக்​கும் சீதா​வும் நட்சத்​திரங்​களே​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x