Published : 04 Feb 2025 06:14 AM
Last Updated : 04 Feb 2025 06:14 AM
தன் முன்னால் நிற்கும் நர்சைப் பார்த்தான் மாரியப்பன். பளிச்சென்ற வெள்ளை உடையிலிருந்த அந்த முகத்தில் மருந்திற்குக் கூடக் கனிவையோ இரக்கத்தின் சாயலையோ கண்டுபிடிக்க முடியவில்லை அவனால்.
நேற்றிரவு தேவதையைப் போலத் தெரிந்த அந்த முகத்தில் இருந்த கருணை இப்போது எங்கே போய்விட்டதென்று எண்ணத் தோன்றியது. அவர்கள் பார்க்கும் வேலை அப்படி. ஒவ்வொரு நாளும் எத்த னையோ உயிர்கள் பிறப்பதையும் எத்தனையோ உயிர்கள் இறப்பதையும் பார்ப்பவர்கள். ஆனால், மாரியப்பனால்தான் தாங்க முடியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT