Published : 01 Feb 2025 06:17 AM
Last Updated : 01 Feb 2025 06:17 AM

ப்ரீமியம்
பள்ளிகளுக்கான முன்னுதாரண நூல்! | நூல் நயம்

திருச்சி எஸ்.ஆர்​.வி. பள்ளி தன்னுடைய வளாகத்​திற்கு 1,300க்​கும் மேற்​பட்ட ஆளுமை களை வரவழைத்து உள்ளது. அப்படி வருகை தந்த ஆளுமைகள் பள்ளி​யின் மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி பெற்​றோருடன் கூட கலந்​துரை​யாடி இருக்​கின்​றனர். அங்கு வருகை தந்த ஆளுமை​களில் வெறும் 31 பேருடைய உரைகளை மட்டும் தொகுத்து 'வெளிக் காற்று' எனும் நூலாக கொண்டு வந்துள்ளனர். மிகக் குறைவான உரைகள். என்றாலும் அந்நூல் ஆயிரம் பக்கங்கள் கொண்​டதாக வந்திருக்​கிறது.

உரையாற்றிய​வர்​களில் களப்​பணி​யாளர்​கள், கல்வி​யாளர்​கள், மருத்​துவர்​கள், நடிகர்கள் , எழுத்​தாளர்​கள், மாவட்ட ஆட்சி​யர்​கள், பத்திரி​கை​யாளர்​கள், நம் நாட்​டின் தேர்தல் ஆணைய உயர் பொறுப்​பில் இருந்​தவர் எனப் பலரும் பேசி இருக்​கின்​றனர். வரலாறு, இலக்​கி​யம், வாசிப்பு, கனவு​கள், அரசி​யல், சமூகம், நாடகம், இசை, கல்வி என வாழ்​வின் அனைத்து சாளரங்கள் வழியாக​வும் வீசி​யிருக்​கிறது வெளிக் காற்று.. அந்த உரைகளை எல்லாம் மூத்த எழுத்​தாளர் கமலாலயன் எழுத்​தாக்கம் செய்​துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x