Published : 28 Dec 2024 06:38 AM
Last Updated : 28 Dec 2024 06:38 AM
மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் காலமாகிவிட்டார். எம்டிக்கு முன்னும் பின்னும்கூட எம்டி அளவுக்குக் கொண்டாடப்பட்ட முழுமையான எழுத்தாளர்கள் மலையாளத்தில் இல்லை. வைக்கம் முகம்மது பஷீரைச் சொன்னாலும் அவருக்கு ஒரு சினிமா முகம் கிடையாது; வேறு எந்த எழுத்தாளருக்குமே இந்த முகம் இல்லை. பத்மராஜன் போன்ற சில எழுத்தாளர்கள் சினிமாவில் இயங்கியிருக்கிறார்கள்.
ஆனால், எம்டி அளவுக்கு சினிமாவின் சூத்திரம் அறிந்தவர்கள் இல்லை. எழுதத் தொடங்கிய 50களிலிருந்து இந்த இரண்டாயிரத்தின் தொடக்கம் வரை சினிமாவிலும் இலக்கியத்திலும் கோலோச்சிய தனித்துவமான ஆளுமை எம்டி. இந்த நூற்றாண்டின் மாற்றங்களுக்குத் தாக்குப்பிடிக்க முடியாத கடந்த காலக் கற்பிதங்களைத் தரவாட்டை முன்னிறுத்திச் சொல்வது எம்டி கதையின் பொது இயல்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT