Published : 06 Nov 2025 07:49 AM
Last Updated : 06 Nov 2025 07:49 AM

இரவில் உபேர் ஓட்டுநராக பணிபுரிந்து ஏழை மாணவிகளின் கல்விக்கு உதவும் தொழிலதிபர்

புதுடெல்லி: இந்​தி​ய தொழிலதிபரான நவ் ஷா அண்​மை​யில் பிஜி நாட்​டுக்​குச் சென்​றுள்​ளார். அப்​போது உபேர் நிறு​வனத்​தின் ஒரு வாடகை காரில் ஏறி​னார். அந்​தக் காரை 86 வயதான முதியவர் ஓட்​டிச் சென்​றார். அப்​போது அவரிடம் ஓட்டுநர் பணி​யில் கிடைக்​கும் சம்​பளம் போது​மான​தா என்று கேட்​டுள்​ளார்.

அப்​போது​ அவர் கூறியது, தொழில​திபருக்கு ஆச்​சரி​யத்தை ஏற்​படுத்​தி​யது. அவர் சாதாரண ஓட்டுநர் அல்ல. பிஜி நாட்​டிலுள்ள மிகப்​பெரிய தொழில​திபர்​களில் ஒரு​வர். அவரது நிறு​வனம் ஆண்​டு​தோறும் ரூ.1,500 கோடி வர்த்​தகத்தை நடத்தி வரு​வது தெரிய​வந்​தது. அவரது பூர்​வீகம் இந்​தி​யா​ என்​பதும் தெரிய​வந்​தது.

1929-ல் அவரது தந்தை பிஜி நாட்​டில் தொடங்​கிய வர்த்​தகத்தை அவரது குடும்​பத்​தார் தொடர்ந்து வெற்​றிகர​மாக நடத்தி வரு​கின்​றனர். நகைக் கடைகள், உணவகங்​கள் மற்​றும் பல்​பொருள் அங்​காடிகள் நடத்​தப்​பட்டு வரு​கின்​றன. இதன்​மூலம் இந்த நிறு​வனம் ஆண்​டு​க்கு ரூ.1,500 கோடி ஈட்டி வரு​கிறது.

இந்​நிலை​யில் இந்த தொழிலதிபர் தினமும் இரவு நேரத்​தில் உபேர் கால் டாக்ஸி ஓட்​டு​கிறார். இதில் வரும் வரு​மானத்தை 24 பெண் குழந்​தைகளின் கல்விக்கு கொடுத்து உதவி வரு​கிறார் அவர். அவரின் 3 மகள்களும் உயர்​கல்வி பயின்று வெற்​றிகர​மான பெண்​களாக உலகில் வலம் வரு​கின்​றனர். தனது மகள்​களைப் போலவே அனைத்து பெண் குழந்​தைகளும் வாழ்​வில்
முன்​னேற வேண்​டும் என்​ப​தற்​காகவே அவர் இவ்​வாறு நிதி​யுதவி செய்து வரு​கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x