Published : 06 Nov 2025 07:55 AM
Last Updated : 06 Nov 2025 07:55 AM

மகனின் முதல் சம்பளத்தை வாங்கிய பெற்றோர் மகிழ்ச்சி: சமூக ஊடகத்தில் வீடியோ வைரல்

புதுடெல்லி: இளைஞர் ஒருவர் தனது முதல் சம்​பளத்தை பெற்​றோரிடம் கொடுத்த பிறகு அவர்​களின் முகத்​தில் ஏற்​பட்ட மகிழ்ச்​சியை படம் பிடித்து ‘எக்​ஸ்' தளத்​தில் பகிர்ந்து கொண்​டுள்​ளார். டெல்லி அருகே காஜி​யா​பாத்தை சேர்ந்த ஆயுஷ்​மான் சிங் என்ற அந்த இளைஞர் அந்த வீடியோவுக்கு ‘முதல் சம்​பளம், நேரடி​யாக பெற்​றோருக்​கு...' என்று தலைப்​பிட்​டுள்​ளார்.

அந்த வீடியோ பதி​வில், ஆயுஷ்​மான் சிங் தனது தாயை​யும் தந்​தையை​யும் ஒன்​றாக உட்​காரச் சொல்லி கண்​களை மூடு​மாறு கூறுகிறார். பிறகு தனது சம்பள கவரை அவர்​கள் கைகளில் கொடுத்து கண்​களை திறந்து பார்க்​கு​மாறு கூறுகிறார். கவரில் ரூ.500 நோட்​டு​களை பார்த்த அவரது தாய் ‘வாவ்! என்ன இது..' என்று மிக​வும் ஆச்​சரியப்​படு​கிறார். இதற்​கு, ‘எனது முதல் சம்​பளம்' என ஆயுஷ்​மான் பதில் அளிக்​கிறார்.

‘வாவ்! அற்​புதம்.. அரு​மை.. நிறைய பணம் உள்​ளதே..' என்று அவரது தாய் மீண்​டும் வியப்பு தெரிவிக்​கிறார். அப்​போது தாய், தந்​தை​யின் உணர்ச்​சிப் பெருக்கு நம்மை நெகிழ்ச்சி அடையச் செய்​கிறது. இந்த வீடியோ ஆன்​லைனில் மிகுந்த வரவேற்பை பெற்​றுள்​ளது. ‘‘இந்த செயலி​யில் நான் பார்த்​ததில் மிக​வும் ஆரோக்​கிய​மான விஷ​யம் இது​வாகத்​தான் இருக்​கும்’’ என்று ஒரு பயனர் கூறி​னார்.

மற்​றொரு பயனர், ‘‘நீங்​கள் வாங்​கும் பொருளின் விலையோ அல்​லது நீங்​கள் அவர்​களுக்​குக் கொடுக்​கும் பணத்​தின் அளவோ முக்​கியமல்ல. உங்​கள் சம்​பளத்​தில் ஒரு பகு​தியை நீங்​கள் அவர்​களுக்​குக் கொடுக்​கும்​போது அவர்​களின் கண்​களில் ஏற்​படும் பெரு​மை​தான் முக்​கி​யம்’’ என்று குறிப்​பிட்​டுள்​ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x