Published : 17 Jun 2014 09:16 AM
Last Updated : 17 Jun 2014 09:16 AM
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் முடக்கி வைக்கப்பட்டுள்ள தங்களின் சொத்துகளை உடனடி யாக விடுவிக்கும்படி ஜெ ரியல் எஸ்டேட் உள்ளிட்ட 5 தனியார் நிறுவனங்கள் சார்பாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் மீது வரும் புதன்கிழமை விசாரணை நடை பெறவுள்ளது. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 33 தனியார் நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதில் லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் உள்ளிட்ட 5 தனியார் நிறுவனங்கள் இரு மாதங்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்தன. அந்த மனுக்கள் மீதான விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவில்,''ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள எங்கள் நிறுவனத்தின் சொத்துகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்'' என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து நீதிபதி டி'குன்ஹா பேசுகையில்,''லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனு மீது வாக்குமூலம் பதிவு செய்தல், குறுக்கு விசாரணை, இறுதிவாதம் என அனைத்தும் முடிந்துவிட்டது.
அதனால் அந்த மனு மீது விரைவில் தீர்ப்பு வழங்கவுள்ளேன். அதே போல அனைத்து விசாரணைகளும் முடிந்து தீர்ப்பிற்காக காத்திருக்கும் மெடோ அக்ரோ ஃபார்ம், ரிவர்வே அக்ரோ ராம்ராஜ் அக்ரோ ஃபார்ம்,சைனோரா எண்டர்பி ரைசஸ் ஆகிய நிறுவனங்களின் மனுக்கள் மீதான தீர்ப்பும் இந்த வார இறுதிக்குள் வழங்கப்படும்'' என்றார்.
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள ஜெ ரியல் எஸ்டேட், ஜெ ஃபார்ம் ஹவுஸ், ஜெ சசி ஹவுஸிங் டெவலப்மெண்ட், கிரீன் ஃபார்ம் ஹவுஸ் மற்றும் ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் ஆகிய 5 தனியார் நிறுவனங்கள் சார்பாக புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்களில்,''வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் எங்களுடைய நிறுவனங் களில் பங்குதாரர்களாக மட்டுமே இருக்கிறார்கள். இந்த 5 நிறுவனங்களுக்கும் அவர் களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எங்களுடைய நிறுவனங் களை குற்றம் சாட்டப்பட் டவர்களுடைய சொந்த நிறுவனங் களாக கருதி, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சொத்துக்குவிப்பு வழக்கில் இணைத்துள்ளனர்.
எனவே முடக்கப்பட்டுள்ள நிறுவன சொத்துகளை விடுவிக்க வேண்டும்''என கோரப்பட்டுள்ளது.
5 தனியார் நிறுவனங்களின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி டி'குன்ஹா,'இந்த புதிய மனுக்களை தாக்கல் செய்துள்ள நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் எங்கே?' என வினவினார். அப்போது கிரீன் ஃபார்ம் ஹவுஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாலாஜி ஆஜரானார். ‘மற்ற 4 நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் சுரேஷ் குமாருக்கு மஞ்சள் காமாலை. அதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். எனவே அவரால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியவில்லை' என ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
அதற்கு நீதிபதி, ‘அவருடைய முகவரியை நீதிமன்றத்திடம் அளியுங்கள். அவருக்கு சம்மன் அனுப்புகிறோம்' என்றார். இதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT