Published : 04 Jun 2014 10:00 AM
Last Updated : 04 Jun 2014 10:00 AM
திருப்பதி அருகே செவ்வாய்க் கிழமை காலை லாரியில் கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 54 தமிழர்களையும் கைது செய்தனர்.
திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியிலிருந்து தினந்தோறும் செம்மரங்கள் கடத்தப்பட்டு வரு கின்றன. இதையடுத்து, வனப் பகுதி முழுவதும் கடத்தல்காரர் களை தேடும் பணியில் 530 பேர் அடங்கிய மலையேறும் பயிற்சிபெற்ற போலீஸ் படையினர் ஈடுபட்டுள்ளனர். தேடுதல் வேட்டையின்போது, போலீஸார் மீது தாக்குதல் நடத்திய தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், செம்மரங்கள் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில், மாமண்டூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வேகமாக வந்த லாரியை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அதில் சோதனையிட்டபோது, ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரங்கள் இருந்தது தெரியவந்தது. அதன்
பின்னர், லாரியிலிருந்த தமிழக கூலி தொழிலாளர்கள் 54 பேரை கைது செய்தனர். இதுவரை கடந்த 3 நாட்களில் மட்டும் தமிழகத்தைச் சேர்ந்த மரம் வெட்டும் கூலி தொழிலாளர்கள் 735 பேரை ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT