Published : 31 Dec 2021 08:52 AM
Last Updated : 31 Dec 2021 08:52 AM

ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளானவர்களுக்கு டெல்டா திரிபை எதிர்க்கும் தடுப்பு ஆற்றல் உருவாகிறது: ஆய்வில் புதிய தகவல்

புதுடெல்லி

ஒமைக்ரான் தொற்றுக்கு உள்ளான வர்களின் உடலில், டெல்டா திரிபை எதிர்கொள்வதற்கான நோய் எதிர்ப்பு ஆற்றல் உருவாவதாக தென் ஆப்பிரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டும் ஒமைக்ரான் தொற் றுக்கு உள்ளானவர்களும் தடுப் பூசி போடமால் ஒமைக்ரான் தொற்றுக்கு உள்ளானவர்களும் அந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். அவர் களின் உடலிலிருந்து ரத்த மாதிரிகளை எடுத்து விஞ்ஞானி கள் பரிசோதித்தனர். அப்போது அவர்களின் உடலில் ஒமைக் ரானையும், டெல்டா திரிபையும் எதிர்கொள்வதற்கான எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருப்பது தெரிய வந்தது. அதிலும் தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்களுக்கு அதிக எதிர்ப்பு ஆற்றல் உருவாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஒமைக்ரான் தொற்றானது டெல்டா திரிபு பரவுதை கட்டுப்படுத்தக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் திரிபானது நாம் சென்ற ஆண்டில் எதிர்கொண்ட கரோனா வைரஸ் போன்றதல்ல என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் நோய் எதிர்ப்பு நிபுணர் ஜான் பெல் தெரிவித்துள்ளார்.

முந்தைய திரிபுகளை விடவும் ஒமைக்ரான் மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது எனவும் ஆனால், முந்தைய திரிபுகளை விடவும் குறைவான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டது.

தற்போது உலகெங்கிலும் ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. பல நாடுகள் தடுப்பு முயற்சியை மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு நிபுணர் ஜான் பெல் ‘‘சென்ற ஆண்டு நாம் பார்த்த காட்சிகள் மிக பயங்கரமானவை. அவசர பிரிவுகள் நிரம்பி வழிந்தன.நோய்த் தொற்றின் தீவிரத்தால் பலர் இறந்தனர். ஆனால், ஒமைக்ரான் திரிபு தீவிரம் குறைந்தது. ஒமைக்ரான் தொற்றுக்கு உள்ளா னவர்கள் சில நாட்களிலே அதன் தாக்கத்திலிருந்து விடுபட்டு விடுகின்றனர்’ என்று அவர் தெரி வித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x