Published : 31 Dec 2021 08:48 AM
Last Updated : 31 Dec 2021 08:48 AM
கரோனா சிகிச்சைக்கான மால்னுபிரவிர் மாத்திரை ஒன்று ரூ.40 முதல் ரூ.75 வரை விலை நிர்ணயம் செய்யப்படலாம் என அதனை தயாரிக்கும் ஆப்டிமஸ் ஃபார்மா நிறுவனம் கூறியுள்ளது.
கரோனா தொற்றால் தீவிர பாதிப்புக்கு உள்ளாவோருக்கு சிகிச்சை அளிக்க அமெரிக்காவை சேர்ந்த மெர்க் என்ற மருந்து நிறுவனம் மால்னுபிரவிர் என்ற மாத்திரையை தயாரித்துள்ளது. இந்த மாத்திரையை அவசர கால பயன்பாட்டுக்கு இந்தியா அண்மையில் அனுமதி அளித் தது. இந்தியாவில் இந்த மாத்திரைகளை ஆப்டிமஸ் ஃபார்மா, டாக்டர் ரெட்டீஸ், சிப்லா, சன் ஃபார்மா உள்ளிட்ட 13 நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
இதுகுறித்து ஆப்டிமஸ் ஃபார்மா நிறுவனத் தலைவர் னிவாச ரெட்டி கூறியதாவது:
மால்னுபிரவிர் மாத்திரைகளை தயாரிப்பது கடினமானது இல்லை. எனவே இவற்றின் விலை குறைவாகவே இருக்கும். ஒரு மாத்திரைக்கு ரூ.40 முதல் ரூ.75 வரை விலை நிர்ணயம் செய்யப் படலாம். கரோனா சிகிச்சைக்கு 5 நாட்கள் இந்த மாத்திரைகளை உட்கொள்ள வேண்டி வரும். அதன்படி பார்க்கும்போது, 5 நாள்சிகிச்சைக்கு தோராயமாக ரூ.1,600 முதல் ரூ.3,000 வரை செலவாகும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT