Published : 30 Dec 2021 06:59 AM
Last Updated : 30 Dec 2021 06:59 AM

அனில் தேஷ்முக், மகன்கள் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை

மும்பை

மகாராஷ்டிராவில் உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக், மும்பையில் மது பான விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் இருந்து மாதம் ரூ.100 கோடி வசூலிக்கும்படி போலீசாரை வற்புறுத்துவதாக முன்னாள் காவல் துறை ஆணையர் பரம்வீர் சிங் குற்றம் சாட்டினார்.

இதுபற்றி விசாரிக்க சிபிஐக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தர விட்டதைத் தொடர்ந்து அனில் தேஷ்முக் ராஜினாமா செய்தார். சிபிஐ விசாரணை அடிப்படையில் அமலாக்கத் துறையும் அனில் தேஷ்முக் மீது பண பரிமாற்ற மோசடி வழக்கு பதிவு செய்தது.இவ்வழக்கில் அனில் தேஷ்முக் கைது செய்யப்பட்டு இப்போது சிறையில் உள்ளார்.

மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் இவ்வழக்கில் அனில் தேஷ்முக் மீது அமலாக்கத் துறை சார்பில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், அவரது 2 மகன்களும் பண பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனில் தேஷ்முக்கின் குடும்ப உறுப்பினர்களால் 11 கம்பெனிகள் நேரடியாக நிர்வகிக்கப்பட்டு வந்ததாகவும் மேலும்13 கம்பெனிகள் அவரது குடும் பத்துக்கு நெருக்கமானவர்கள் பெயரில் நடத்தப்பட்டதாகவும் இந்தக் கம்பெனிகளில் பண பரிமாற்ற மோசடி நடந்துள்ள தாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x