Published : 29 Dec 2021 05:56 AM
Last Updated : 29 Dec 2021 05:56 AM

'தி இந்து' பத்திரிகையாளருக்கு கோயங்கா விருது

சிவ் சஹாய் சிங்

புதுடெல்லி

‘தி இந்து' பத்திரிகையின் செய்தியாளர் சிவ் சஹாய் சிங், ராம்நாத் கோயங்கா விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

‘தி இந்து' பத்திரிகையின் மேற்கு வங்க மாநிலப் பிரிவில் செய்தியாளராக பணிபுரிபவர் சிவ் சஹாய் சிங். இவர் 2019-ல்ஜார்க்கண்ட் மாநில அரசின் டிஜிட்டல் பொது விநியோக முறைத் திட்டத்தால் அடித்தட்டு மக்கள் ரேஷன் பொருட்களை இழந்தது தொடர்பாக ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.

ஆதார் அட்டைகளை ரேஷன் அட்டைகளுடன் இணைக்க முடியாததாலும், ஆதார் அட்டை இல்லாதவர்களும் ரேஷன் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டதை இந்த கட்டுரை விளக்கியது. பெரும்பாலும் பழங்குடி இனத்தவர் இந்த புதிய டிஜிட்டல்மயமாக்கத் திட்டத்தால் பாதிக்கப்பட்டதை கட்டுரை எடுத்துக்காட்டியிருந்தது.

இந்த கட்டுரைக்காக சிவ்சஹாய் சிங், ராம்நாத் கோயங்காவிருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

`கண்ணுக்கு தெரியாத இந்தியாவை வெளிக்கொணர்தல்’ என்ற பிரிவின் கீழ் விருதுக்கு சிவ் சஹாய் சிங் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x