Published : 04 Jun 2014 03:29 PM
Last Updated : 04 Jun 2014 03:29 PM
மோகன் பகவத்தின் பாதுகாப்பு பணியில் சென்ற கார்தான் விபத்துக்குள்ளானது என்றும், அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் ஆர்.எஸ்.எஸ். விளக்கம் அளித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இன்று மதியம் டெல்லி பரேட் சாலையில் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, அவரது பாதுகாப்பு பணிக்காக உடன் சென்ற கார் மீது மற்றொரு கார் மோதி விபத்துள்ளானது.
இதில், மோகன் பகவத்துக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும், அவர் நலமுடன் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் நலமுடன் இருப்பதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவும் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், "டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் மோகன் பகவத்தின் பாதுகாப்பில் சென்று கொண்டிருந்த கார் மீது தான் ஹரியாணா அரசு பதிவு எண் கொண்ட கார் மோதியது.
மோகன் பகவத் பயணம் செய்த கார் மீது மோதவில்லை. இதனால், மோகன் பகவத் நலமுடன் உள்ளார். அவரது பயணத் திட்டத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை" என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT