Published : 01 Jun 2014 09:45 AM
Last Updated : 01 Jun 2014 09:45 AM
டீசல் விலை லிட்டருக்கு 50 பைசா உயர்த்தப் பட்டுள்ளது. இந்த விலை உயர்வு சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
சென்னையில் வரிகள் உள்பட ஒரு லிட்டருக்கு 71 பைசா உயர்ந்துள்ளது. இதன் படி ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.60.50-ல் இருந்து ரூ.61.21 ஆக அதிகரித்துள்ளது.
டீசல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டம் முழுமையாக குறையும் வரை மாதம் தோறும் 50 பைசாவை உயர்த்தும் கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கூட்டணி அரசு முடிந்து பாஜக கூட்டணி அரசிலும் இது தொடர்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT