Published : 01 Aug 2019 07:52 AM
Last Updated : 01 Aug 2019 07:52 AM

முஸ்லிம் பெண்கள் சமமாக நடத்தப்படுவது உறுதி: முத்தலாக் தடை மசோதா பற்றி சாய்ரா பானு கருத்து

புதுடெல்லி

முத்தலாக் தடை மசோதா நிறைவேறியிருப்பதன் மூலம் சமுதாயத்தில் முஸ்லிம் பெண்கள் சமமாக நடத்தப்படுவார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என முத்தலாக் நடைமுறையை எதிர்த்து வழக்கு தொடுத்த மனுதாரர்களில் ஒருவரான சாய்ரா பானு (38) தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் ஆண்கள் உடனுக்கு டன் 3 முறை தலாக் (முத்தலாக்) கூறி மனைவியை விவாகரத்து செய்வது வழக்கமாக இருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட சாய்ரா பானு உள்ளிட்ட 7 பேர், முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 2016-ல் மனு தாக்கல் செய்தனர்.

இதை விசாரித்த உச்ச நீதிமன் றம், இந்த நடைமுறை சட்ட விரோதம் என 2017-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதை தடை செய்ய சட்டம் இயற்று மாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி முத்த லாக் நடைமுறைக்கு தடை விதிக்க வகை செய்யும் முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி உள்ளது.

இதுகுறித்து சாய்ரா பானு கூறும்போது, “சமுதாயத்திலும் சட்டத்தின் பார்வையிலும் முஸ்லிம் பெண்கள் சமமாக நடத்தப்படுவார் கள் என்பதை உறுதி செய்ய இந்த மசோதா வகை செய்கிறது. என்னைப் போல பாதிக்கப்பட்டவர் களுக்கு மறுவாழ்வு கிடைக்க அரசும் சமுதாயமும் இனி உதவும் என்று நம்புகிறேன்” என்றார்.

முத்தலாக் நடைமுறையால் பாதிக்கப்பட்ட, உ.பி.யின் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த நிதா கான் (24) கூறும்போது, “இது முஸ்லிம் பெண்களுக்கு கிடைத்த வெற்றி. எங்கள் சொந்த மதத்தையே எதிர்த்து போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். எங்கள் போராட்டம் நியாயமானது என்பதை இந்த மசோதா தெளிவு படுத்தி உள்ளது” என்றார். சட்ட மாணவியான இவர், முத்தலாக் நடைமுறை மற்றும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

மும்பையைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான பாரதிய முஸ்லிம் மகிளா அந்தோலன் (மனுதாரர்) அமைப்பைச் சேர்ந்த நூர்ஜஹான் சபியா நியாஸ் கூறும்போது, “முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ளவும் முஸ் லிம் பெண்களுக்கு சம அந்தஸ்து கிடைக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது” என்றார்.

அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினர் ஒருவர் கூறும்போது, “இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு, அதை எதிர்த்து வழக்கு தொடரப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x