Published : 27 Jun 2017 09:29 AM
Last Updated : 27 Jun 2017 09:29 AM
மும்பை சிறையில் ஒரு பெண் கைதி உயிரிழந்ததையடுத்து கலவரத்தில் ஈடுபட்டதாக, இந்திராணி முகர்ஜி உட்பட 200 பெண் கைதிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஷீனா போரா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அவரது தாய் இந்திராணி முகர்ஜி மும்பையில் உள்ள பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண் குற்றவாளியான மஞ்சு கோவிந்த் ஷெட்டியை (45) பெண் அதிகாரி ஒருவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அரசுக்கு சொந்த மான ஜேஜே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மஞ்சு, கடந்த வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந் தார். இது தொடர்பாக 6 சிறை ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 302-வது பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, மஞ்சுவின் மரணத்தைக் கண்டித்து சனிக் கிழமை காலையில் இந்திராணி உட்பட 200-க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் சிறைக்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சிலர் கூரை மீது ஏறிய தாகவும் செய்தித்தாள்களைத் தீயிட்டு கொளுத்தியதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் ஒரு பெண் சிறை அதிகாரி தாக்கியதாலேயே மஞ்சு உயிரிழந்தார் என்றும் இந்த தகவலை ஊடகங்களுக்கு தெரிவிக்க விரும்புவதாகவும் கைதிகள் கோஷம் எழுப்பி உள்ள னர். ஆனால், சிறை விதிகளின்படி இதற்கு அனுமதி இல்லை.
இந்நிலையில், இந்திராணி உட்பட 200 பெண் கைதிகள் மீது நேற்று முன்தினம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். கலவரத் தில் ஈடுபட்டது, சட்டவிரோதமாக கூடியது, அரசு அதிகாரியை தாக்கியது உள்ளிட்ட ஐபிசி-யின் பல்வேறு பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மும்பை அருகே உள்ள ராய்கட் மாவட்ட வனப்பகுதியில் 2012-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி ஷீனா போராவின் எரிக்கப்பட்ட சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, அவரது தாய் இந்திராணி, இந்திராணியின் முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணா மற்றும் முன்னாள் டிரைவர் ஷ்யாம்வர் ராய் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT