Published : 19 Nov 2013 12:12 PM
Last Updated : 19 Nov 2013 12:12 PM
மகாராஷ்டிரா மாநில அரசு, சச்சின் டெண்டுல்கர் சாதனை வரலாற்றை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அடுத்த கல்வியாண்டு முதல் இது நடைமுறைப் படுத்தப்படும் என தெரிகிறது.
இது குறித்து அம்மாநில கல்வி அமைச்சர் ராஜேந்திர தர்தா தெரிவித்தவதாவது, "சச்சின் டெண்டுல்கர் சாதனைகளைப் பற்றிய பாடத்தைச் சேர்ப்பதன் மூலம் மாணவர்கள் ஊக்கம் பெற் முடியும். எனவே இது குறித்து அடுத்த வாரம் ஒரு ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம்" என்றார்.
மேலும், எத்தனையாவது வகுப்பில் இருந்து இந்த பாடத்தை சேர்ப்பது என்பதை பால்பாரதி பாடத்திட்டக் குழு முடிவெடுக்கும் என தெரிவித்தார்.
இதற்கு முன்னர், மகாராஷ்டிரா பள்ளி பாடத்திட்டத்தில் கிரிக்கெட் வீரர்கள் சந்திரகாந்த் குல்பரோ, சுனில் கவாஸ்கர் ஆகியோர் பற்றிய பாடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT