Published : 27 Jun 2017 12:33 PM
Last Updated : 27 Jun 2017 12:33 PM
பலாத்கார முயற்சியை எதிர்த்த 18 வயது இளம் பெண் ஒருவரை உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில், "சஹிகணேஷ்பூர் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு வீட்டில் 18 வயது இளம்பெண் தனியாக இருந்தார். அப்போது அண்டைவீட்டு இளைஞர் ஒருவர் தனது செல்போனுக்கு சார்ஜ் செய்ய வேண்டும் எனக் கூறி வீட்டுக்குள் வந்துள்ளார்.
தெரிந்த நபர் என்பதால் அவரை அப்பெண் அனுமதித்துள்ளார். ஆனால் அந்த நபர் இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். அந்தப் பெண் கூச்சலிடவே அருகிலிருந்த கேனிலிருந்த மண்ணெண்ணையை அவர் மீது ஊற்றி பற்றவைத்துள்ளார்.
இதில் அப்பெண் படுகாயமடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளியைத் தேடி வருகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT