Published : 19 Nov 2025 08:15 AM
Last Updated : 19 Nov 2025 08:15 AM

பிரதமர் மோடியை மீண்டும் புகழ்ந்த காங். எம்.பி.சசி தரூர்

புதுடெல்லி: முன்​னாள் மத்​திய அமைச்​சரும் திரு​வனந்​த​புரம் மக்​களவை தொகுதி காங்​கிரஸ் எம்​.பி.​யு​மான சசி தரூர் சமீப கால​மாக பிரதமர் நரேந்​திர மோடியை புகழ்ந்து பேசி வரு​கிறார். இது காங்​கிரஸ் மூத்த தலை​வர்​கள் மத்​தி​யில் அதிருப்​தியை ஏற்படுத்தி உள்​ளது. காங்​கிரஸ் கட்​சிக்​கும் அவருக்​கும் இடையே விரிசல் ஏற்​பட்​டுள்ள நிலை​யில், சசி தரூர் எக்ஸ் தளத்​தில் நேற்று கூறிய​தாவது:

டெல்​லி​யில் நடை​பெற்ற ஒரு நிகழ்ச்​சி​யில், அழைப்​பின் பேரில் நான் பங்​கேற்​றேன். அதில் பேசிய பிரதமர் நரேந்​திர மோடி, இந்​தியா என்​பது வளரும் சந்தை மட்​டுமல்ல, உலக நாடு​களுக்​காக வளர்ந்து வரும் மாதிரி என்று கூறி​னார். கரோனா பெருந்​தொற்​று, ரஷ்​யா-உக்​ரைன் போர் உள்​ளிட்ட சர்​வ​தேச அளவி​லான நிச்​சயமற்ற தன்​மைக்கு நடு​விலும் இந்​திய பொருளா​தா​ரம் வளர்ந்து வரு​வதைத்​தான் அவர் அவ்​வாறு குறிப்​பிட்​டுள்​ளார்.

பிரதமரின் உரை, பிரிட்​டனைச் சேர்ந்த மெக்​காலே​வின் 200 ஆண்டு அடிமை மனப்​பான்மை மரபை மாற்ற வேண்​டும் என்​பதை வலி​யுறுத்​து​வ​தாக இருந்​தது. இந்​தி​யா​வின் பாரம்​பரி​யம், மொழிகள் மற்​றும் அறி​வியல் மரபு​களின் பெரு​மையை மீட்​டெடுக்க 10 ஆண்டு திட்​டத்தை மேற்​கொள்ள வேண்​டும் என்று அவர் அழைப்பு விடுத்​தார். இந்த நிகழ்ச்​சி​யில் பார்​வை​யாளர்​களில் ஒரு​வ​ராக நான் பங்​கேற்​ற​தில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x