Published : 18 Nov 2025 08:31 AM
Last Updated : 18 Nov 2025 08:31 AM

உ.பி.யில் மனைவியை கொன்று தற்கொலை என சித்தரித்தவர் கைது

பிரயாக்ராஜ்: உ.பி.​யின் பிர​யாக்​ராஜ் மாவட்​டம், பாரா அனல் மின் நிலை​யத்​தில் பணி​யாற்றி வந்​தவர் ரோகித் (35). இவர் லாலாப்​பூர் என்ற கிராமத்​தில் தனது மனைவி சுஷ்மா திவேதி (32) உடன் வாடகை வீட்​டில் வசித்து வந்​தார்.

இந்​நிலை​யில் சுஷ்மா கடந்த வெள்​ளிக்​கிழமை பிற்​பகல் கழுத்​தில் காயத்​துடன் ரத்த வெள்​ளத்​தில் வீட்​டில் இறந்து கிடந்​தார். தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீ​ஸார், வீட்​டின் தரை​யில், ‘‘நான் மனநிலை சரி​யில்​லா​தவள், எனது கணவர் அப்​பா​வி’’ என ரத்​தத்​தால் எழு​தி​யிருந்​ததை பார்த்​தனர்.

ஆனால் தற்​கொலை குறிப்பை எழு​தி​யதற்​கான ரத்​தக்​கறை சுஷ்​மா​வின் கையில் இல்​லாததைக் கண்டு சந்​தேகம் அடைந்​தனர். இதையடுத்து ரோகித்​திடம் விசா​ரணை மேற்​கொண்​ட​தில் அவர் சுஷ்​மாவை கொலை செய்​து​விட்டு தற்​கொலை போல் சித்​தரிக்க முயன்​றது தெரிய​வந்​தது. இதையடுத்து ரோகித் கைது செய்​யப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x