Last Updated : 18 Nov, 2025 07:06 AM

 

Published : 18 Nov 2025 07:06 AM
Last Updated : 18 Nov 2025 07:06 AM

ஆன்லைன் மோசடியில் ரூ.32 கோடி இழந்த பெண்: பெங்களூரு சைபர் க்ரைம் போலீஸார் தீவிர விசாரணை

பெங்களூரு: பெங்​களூரு​வைச் சேர்ந்த 57 வயதான பெண், தனி​யார் நிறு​வனத்​தில் நிதிப்​பிரி​வில் உயர் பொறுப்​பில் உள்​ளார். இவரை கடந்த ஆண்டு செப்​டம்​பர் 15-ம் தேதி வாட்​ஸ்​அப் மூலம் மர்ம நபர் ஒரு​வர் தொடர்பு கொண்​டார்.

மும்​பை​யில் உள்ள கூரியர் நிறு​வனத்​தில் இருந்து பேசுவ​தாக கூறி, ‘‘உங்​களுக்கு வெளி​நாட்​டில் இருந்து பார்​சல் வந்​திருக்​கிறது. அதில் 4 பாஸ்​போர்ட்​கள், 3 கிரெடிட் கார்​டு​கள், போதை பொருட்​கள் உட்ப‌ட தடைசெய்​யப்​பட்ட பொருட்​கள் இருக்​கின்​றன. நீங்​கள் உடனடி​யாக மும்​பைக்கு வரா​விட்​டால், உங்​கள் மீது போலீ​ஸில் புகார் அளிக்​கப்​படும்'' என எச்​சரித்​தார்.

இதற்கு அந்த பெண், தனக்கு அத்​தகைய பார்​சல் வர வாய்ப்பு இல்லை என்று கூறி​யுள்​ளார். அடுத்த சில தினங்​களில், பிரதீப் சிங் என்ற நபர் அவரை ஸ்கைப் மூலம் தொடர்பு கொண்​டார். தன்னை சிபிஐ அதி​காரி​யாக அறி​முகப்​படுத்​திக் கொண்ட அவர், ‘‘தடை செய்​யப்​பட்ட பொருட்​களை கடத்​தி​யதற்​காக நீங்​கள் விரை​வில் கைது செய்​யப்​படு​வீர்​கள். உங்​களுக்கு எதி​ராக அனைத்து ஆதா​ரங்​களும் சிக்​கி​யுள்​ளன. உங்​களது வீடு எங்​களது கண்​காணிப்​பில் இருக்​கிறது.

இந்த வழக்​கில் இருந்து தப்​பிக்க வேண்​டுமென்​றால் உங்​களது அனைத்து சொத்​துக்​களின் விவரங்​களை​யும் ரிசர்வ் வங்​கி​யின் கீழ் உள்ள நிதி புல​னாய்​வுப் பிரி​வின் சரி​பார்ப்​புக்​காக சமர்ப்​பிக்க வேண்​டும்'' என்​றார். பின்​னர் ராகுல் யாதவ் என்ற நபர் தொடர்பு கொண்டு வழக்​கின் டெபாசிட்​டாக ரூ.30 லட்​சம் செலுத்​து​மாறு கூறி​னார்.

பின்​னர் அந்தப் பெண் தனது சொத்து விவரங்​கள், வங்கி விவரங்​கள் அனைத்​தை​யும் சமர்ப்​பித்​தார். மேலும் கடந்த ஆண்டு செப்​டம்​பர் 24-ம் தேதி வங்கி மூல​மாக ரூ.30 லட்​சம் செலுத்​தி​னார். இதைத் தொடர்ந்து வழக்​கில் ஜாமீன் டெபாசிட் பணமாக ரூ.2 கோடி தர வேண்​டும் என கேட்​டனர். அதனை​யும் அந்தப் பெண் வழங்​கி​யுள்​ளார். இதே பாணி​யில் 187 முறை பணப்​பரி​மாற்​றம் செய்​து, அந்தப் பெண்​ணிடம் இருந்து ரூ.31.83 கோடி பணத்தை மர்ம கும்​பலைச் சேர்ந்​தவர்​கள் பறித்​துள்​ளனர்.

இந்த பணத்தை கடந்த மார்ச் 26-ம் தேதிக்​குள் தரு​வ​தாக கூறி​யுள்​ளனர். ஆனால் அவர்​கள் பணத்தை தராத​தால், அந்தப் பெண் கடந்த நவம்​பர் 14-ம் தேதி பெங்​களூரு மாநகர காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் புகார் அளித்​தார். இந்த புகாரின்​ பேரில் பெங்​களூரு இணைய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் 3 பிரிவு​களில் வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x