Published : 17 Nov 2025 08:45 AM
Last Updated : 17 Nov 2025 08:45 AM

நூ நகரில் 10 நாள் பதுங்கியிருந்த டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி: என்ஐஏ அதிகாரிகள் தகவல்

புதுடெல்லி: டெல்லி கார் குண்​டு​வெடிப்பு வழக்கை விசா​ரிக்​கும் என்ஐஏ அதி​காரி​கள் கூறிய​தாவது: ஹரி​யா​னா​வின் பரி​தா​பாத்​தில் உள்ள அல் பலா மருத்​து​வ​மனை​யில் உமர் நபி மருத்​து​வ​ராக பணி​யாற்றி வந்​தார். அங்கு சக மருத்​து​வர்​கள் கைது செய்​யப்​பட்ட நிலை​யில் உமர் நபி தலைமறை​வா​னார். இதன்​பிறகு ஹரி​யா​னா​வின் நூ நகரில் அவர் 10 நாட்​கள் பதுங்கி இருந்​துள்​ளார்.

அங்கு ஹிதா​யத் காலனி​யில் உள்ள வீட்​டில் அவர் தங்​கி​யிருந்து உள்​ளார். இந்த வீடு, அல் பலா மருத்​து​வ​மனை ஊழியர் சோகிப்​பின் உறவினர் வீடு ஆகும். சோகிப் கைது செய்​யப்​பட்டு உள்​ளார். வீட்​டின் உரிமை​யாளர் தலைமறை​வாகி​விட்​டார். அவரை தீவிர​மாக தேடி வரு​கிறோம்.

கடந்த 9-ம் தேதி நூ நகரில் இருந்து வெடிபொருட்​கள் நிரப்​பப்பட்ட காரில் மருத்​து​வர் உமர் நபி புறப்​பட்டு உள்​ளார். அங்​குள்ள ஏடிஎம் மையத்​துக்கு முகத்தை மூடியபடி சென்​றுள்​ளார். ஆனால் ஏடிஎம் இயந்​திரம் செயல்​ப​டாத​தால் அவரால் பணம் எடுக்க முடிய​வில்​லை. பின்​னர் வேறொரு ஏடிஎம் மையத்​துக்கு சென்று பணம் எடுத்​துள்​ளார். நூ நகரில் இருந்து நேரடி​யாக டெல்​லிக்கு வந்து கார் குண்​டு​வெடிப்பு தாக்​குதலை நடத்தி உள்​ளார்.

டெல்லி குண்​டு​வெடிப்பு வழக்​கில் அடுத்​தடுத்து மருத்​து​வர்​கள் கைது செய்​யப்​பட்டு வரு​கின்​றனர். காஷ்மீர் மட்​டுமன்றி உத்தர பிரதேசம், ஹரி​யா​னா​வில் பணி​யாற்​றும் மருத்​து​வர்​கள் குறித்​தும் தீவிர விசா​ரணை நடத்தி வரு​கிறோம். குறிப்​பாக காஷ்மீரை சேர்ந்த சுமார் 200 மருத்​து​வர்​கள் உத்தர பிரதேசத்​தில் பணி​யாற்றி வரு​கின்​றனர். அவர்​கள் அனை​வரும் விசா​ரணை வளை​யத்​துக்​குள் கொண்டு வரப்​பட்டு உள்​ளனர்.

இந்த வழக்​கில் 30-க்​கும் மேற்​பட்ட மருத்​து​வர்​களுக்கு நேரடி தொடர்பு இருக்​கும் என்று சந்​தேகிக்​கிறோம்​. அவர்​கள்​ அனை​வரும்​ கைது செய்​யப்​படு​வார்​கள்​. இவ்​​வாறு அதி​காரி​கள்​ தெரி​வித்​துள்​ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x