Last Updated : 17 Nov, 2025 08:13 AM

 

Published : 17 Nov 2025 08:13 AM
Last Updated : 17 Nov 2025 08:13 AM

பிஹாரில் குடும்பம், ஆர்ஜேடி கட்சியில் இருந்து லாலு மகள் வெளியேறியதற்கு காரணமான ரமேஸ், சஞ்சய்

ரமீஸ் நிமத், சஞ்​சய் யாதவ்

புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) நிறு​வனர் லாலு​ மகள் ரோஹிணி ஆச்​சார்யா, குடும்பம், கட்சியில் இருந்து வில​கு​வ​தாக அறி​வித்​துள்​ளார். இதற்கு சகோ​தரன் தேஜஸ்​வி​யின் நெருங்​கிய நண்​பர்​கள் ரமீஸ் நிமத் மற்​றும் சஞ்​சய் யாதவ்​தான் காரணம் என்​றும் குற்​றம்சாட்டி உள்​ளார். ஆர்​ஜேடி.​யில் அந்​தளவுக்கு முக்​கி​யத்​து​வம் வாய்ந்த ரமீஸ், சஞ்​சய் ஆகியோர் யார்?

கடந்த 2 ஆண்​டு​களாக தேஜஸ்​வி​யின் அரசி​யல் குழு​வில் ரமீஸ் நிமத், சஞ்​சய் யாதவ் ஆகியோர் முக்​கிய​மானவர்​களாக உள்​ளனர். உ.பி. பல்​ராம்​பூரைச் சேர்ந்​தவர் ரமீஸ். இவரது தந்தை நியாமத்​துல்லா கான். பல்​ராம்​பூர் தொகுதி சமாஜ்​வாதி முன்​னாள் எம்​.பி. ரிஸ்​வான் ஜாகீரின் மரு​மகன் ரமீஸ். ரிஸ்​வான் மூலம் அரசி​யல் அனுபவம் பெற்ற ரமீஸுக்கு தேஜஸ்வி நட்பு கிடைத்​தது. தேஜஸ்வி விளை​யாடி வந்த கிரிக்​கெட் கிளப்​பில் ரமீஸும் இருந்​தார். அதனால் இரு​வருக்​குள் நட்பு உரு​வானது. அதன்​பின் அரசி​யல் களத்தை ஏற்​படுத்தி கொண்​டார் ரமீஸ்.

ஆர்​ஜேடி​யின் ‘வார் ரூம்’ எனப்​படும் அரசி​யல் வியூ​கம் அமைக்​கும் பிரிவுக்கு ரமீஸ் பொறுப்​பாள​ரா​னார். இவர் கூறியபடியே சகோ​தரி ரோகிணி​யின் ஆதர​வாளர்​களில் ஒரு​வருக்கு கூட தேஜஸ்வி தேர்த் சீட் அளிக்​க​வில்​லை. இது​ பூதாகர​மாக வெடித்தது.

இதற்​கிடை​யில், கடந்த ஜனவரி 4, 2022-ம் ஆண்டு பல்​ராம்​பூரின் துளசிபூர் நகர் பஞ்​சா​யத் தலை​வர் பப்பு (எ) பிரோஸ் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார்​.

இந்த வழக்​கில் கைதான ரிஸ்​வான் சிறை​யில் உள்​ளார். இந்த வழக்​கில் ரிஸ்வான் மகள் ஜைபா, ரமீஸை​யும் கைது செய்​தனர். ஆனால், இரு​வரும் தற்​போது ஜாமீனில் உள்​ளனர். தவிர துளசிபூர், கோக்​ராஜ் காவல் நிலை​யங்​களில் கொலை உட்பட 12 வழக்​கு​கள் ரமீஸ் மீது பதி​வாகி உள்​ளன. மாமா​னார் ரிஸ்​வான் மூலம் சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷை​யும் அடிக்​கடி சந்​தித்​துள்​ளார் ரமீஸ்.

ரோஹிணி குற்​றம் சாட்​டி​யுள்ள சஞ்​சய் யாதவ், ஹரி​யா​னா​வின் மகேந்​திரகரைச் சேர்ந்​தவர். டெல்​லி​யில் புள்​ளி​விவர நிபுண​ராக 3 தனி​யார் நிறு​வனங்​களில் பணி​யாற்​றி​யுள்​ளார். 2010-ல் அரசி​யல் ஆலோ​சக​ராக மாறி தன் பணியை ராஜி​னாமா செய்​துள்​ளார். ஹரி​யா​னா​வில் இருந்து உ.பி.க்கு இடம் மாறிய​வர். அகிலேஷ் யாதவுக்கு அரசி​யல் ஆலோ​சக​ராக இருந்​துள்​ளார்.

பின்​னர் தேஜஸ்வி கேட்​டுக் கொண்​டதன்​படி 2012-ல் ஆர்​ஜேடி​யில் சஞ்​சய் இணைந்​துள்​ளார். அதன்​பின் அவர் 2024-ல் ஆர்​ஜேடி​யின் மாநிலங்​களவை எம்​.பி.​யானார். இது​போன்ற காரணங்​களால் குடும்​பம், கட்​சி​யில் இருந்து வில​கு​வ​தாக ரோஹிணி கூறி​யுள்​ளார். இதனால் ஆர்​ஜேடி கட்​சிக்​குள்​ சலசலப்​பு ஏற்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x