Published : 17 Nov 2025 08:01 AM
Last Updated : 17 Nov 2025 08:01 AM

காஷ்மீர் காவல் நிலையத்தில் வெடி விபத்து: வேலைக்கு போக வேண்டாம் என மகள் தடுத்தும் மீறிச் சென்று உயிரிழந்த டெய்லர்

புதுடெல்லி: காஷ்மீரில் தனது மகள் வேலைக்கு போக வேண்​டாம் என்று தடுத்​தும் மீறிச் சென்று காஷ்மீர் காவல் நிலைய வெடி விபத்​தில் தையல்​காரர் உயி​ரிழந்​துள்​ளார்.

ஹரி​யானா மாநிலம் பரி​தா​பாத்​தில் தீவிர​வாத மருத்​து​வர்​களிடம் இருந்து பறி​முதல் செய்யப்பட்ட அம்​மோனி​யம் நைட்​ரேட் உள்ளிட்ட வெடி பொருட்​களை ஆய்​வுக்​காக காஷ்மீர் ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள நவ்​காம் காவல் நிலை​யத்​துக்கு கொண்டு சென்றனர்.

இந்​நிலை​யில், அந்த வெடிபொருட்​களுக்கு பைகள் தைப்​ப​தற்​காக நவ்​காமில் உள்ள டெய்​லர் முகமது ஷபி பரே (57) என்​பவரை வெள்​ளிக்​கிழமை காலை போலீ​ஸார் அழைத்து சென்​றனர். இந்​நிலை​யில், சாப்​பிடு​வதற்​காக டெய்​லர் இரவு 9 மணிக்கு வீட்​டுக்கு சென்​றுள்​ளார். அப்​போது அவரது மகள் ”வெளி​யில் கடும் குளி​ராக உள்​ளது அப்​பா. நீங்​கள் வேலைக்கு போக வேண்​டாம்” என்று கெஞ்சி அடம்​பிடித்​துள்​ளார்.

அதற்கு டெய்​லர் பரே ”சீக்​கிரம் வேலையை முடித்​து​விட்டு வீட்​டுக்கு வந்​து​விடு​வேன்” என்று கூறி மகளை சமா​தானப்​படுத்​தி​விட்டு சென்​றுள்​ளார். ஆனால், விதி​யின் விளை​யாட்டு உயி​ரில்​லாத அவர் உடல் மட்​டும்​தான் மறு​நாள் வீட்​டுக்கு கொண்​டு​வரப்​பட்​டது. அப்​போது, அப்​பாவை பார்த்து மகள் கதறி அழுத காட்சி அனை​வரை​யும் கண்​கலங்​கச் செய்​தது.

இது குறித்து டெய்​லர் பரே​வின் உறவினர் முகமது ஷபி ஷேக் கூறிய​தாவது: வெடிமருந்​துகளுக்கு தனித்​தனி​யாக பைகள் தைக்க வேண்​டும் என்று கூறி பரேவை வெள்​ளிக்​கிழமை காலை அழைத்​துச் சென்​றனர். இரவு உணவுக்​காக வீடு திரும்​பிய பரேவை அவரது மகள் மீண்டும் போக வேண்​டாம் என்று தடுத்​துள்​ளார். திரும்பி வந்​து​விடு​வேன் என இறுதி வார்த்​தையை மகளிடம் கூறிச் சென்ற தந்தை பிண​மாகத்​தான் வீடு திரும்​பி​னார். இரவில் மிகப்​பெரிய அளவில் வெடிச்​சத்​தம் கேட்​டது.

காவல் நிலை​யத்​துக்கு ஓடிச்​சென்று பார்த்​த​போது அது இடி​பாடு​களின் குவிய​லாக காட்சி அளித்​தது. பலரது உடல்​கள் அரு​கில் இருந்த மருத்​து​வ​மனை வளாகம் வரை சிதறிக் கிடந்​தன. டெய்​லர் பரேவுக்கு 3 குழந்​தைகள், மனைவி உள்​ளனர். பரே மட்​டும் தான் உழைத்து அந்த குடும்​பத்தை காப்​பாற்றி வந்​தார். தற்​போது நிற்​க​தி​யாக தவிக்​கும் பரே​வின் குடும்​பத்​துக்கு அரசு​தான் உதவ வேண்​டும்” இவ்​வாறு முகமது ஷபி ஷேக் கூறினார்.

இந்​நிலை​யில், வெடி ​விபத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பங்​களுக்கு தலா ரூ.10 லட்​ச​மும், படு​காயமடைந்தவர்​களுக்கு தலா ரூ.1 லட்​ச​மும் நிவாரணம் வழங்​கப்​படும் என்று ஜம்மு காஷ்மீர் முதல்​வர்​ உமர்​ அப்​துல்​லா அறிவித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x