Published : 17 Nov 2025 07:43 AM
Last Updated : 17 Nov 2025 07:43 AM

மத்திய பிரதேசத்தில் யூடியூப் பார்த்து போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்தவர் கைது

போபால்: ம.பி.​யில் யூடியூப் பார்த்து போலி ரூபாய் நோட்​டு​களை அச்​சடித்​தவர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

மத்​திய பிரதேச மாநிலம் போபாலில் ஒரு பள்​ளிக்கு அருகே ஒரு​வர் போலி 500 ரூபாய் நோட்​டு​களை புழக்​கத்​தில் விட முயற்​சிப்​ப​தாக கடந்த வெள்​ளிக்​கிழமை போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. இதையடுத்​து, பிப்​லானி காவல் நிலை​யத்​தின் குற்​றப் பிரிவு போலீ​ஸார் சம்பவ இடத்​துக்​குச் சென்று விவேக் யாதவ் (21) என்​பவரை கைது செய்​தனர்.

அவருடைய பாக்​கெட்​டிலிருந்து போலி ரூபாய் நோட்​டு​களை பறி​முதல் செய்​தனர். பின்​னர் அவருடைய வீட்​டில் சோதனை நடத்​தினர். அங்கு ஒரு அறை​யில் இருந்த பிரின்ட்​டர்​கள், பிரிசிஷன் ஸ்கேனர்​கள், தாள்​கள், சிறப்பு மை உள்​ளிட்ட பொருட்​களை கைப்​பற்​றினர்.

இதுகுறித்து போலீ​ஸார் கூறும்​போது, “பத்​தாம் வகுப்பு வரை மட்​டுமே படித்​துள்ள விவேக், யூடியூப் வீடியோக்​களை பார்த்​தும், இணை​யதளங்​களில் உலவி​யும் போலி ரூபாய் நோட்டு அச்​சடிப்​பது தொடர்​பான தகவலை தெரிந்து கொண்​டுள்​ளார். 23 போலி 500 ரூபாய் நோட்​டு​களை தயாரித்​துள்​ளார்​" என்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x