Published : 17 Nov 2025 07:22 AM
Last Updated : 17 Nov 2025 07:22 AM

வாக்காளர் எண்ணிக்கையில் குழப்பம்: காங். கட்சி குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்

புதுடெல்லி: பிஹார் தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை குறித்து புகார் தெரிவித்த காங்கிரஸ் கட்சிக்கு, தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

பிஹாரில் 7.42 கோடி வாக்​காளர்​கள் இருப்​ப​தாக கடந்த அக்​டோபர் 6-ம் தேதி தலைமை தேர்​தல் ஆணை​யம் தெரி​வித்​தது. ஆனால், தேர்​தல் முடிந்த பிறகு மொத்த வாக்​காளர் எண்​ணிக்கை 7.45 கோடி என்று ஆணை​யம் கூறியது.

இதுகுறித்து முகநூலில் காங்​கிரஸ் கட்சி கடும் விமர்​சனம் செய்​திருந்​தது. இதுகுறித்து தலைமை தேர்​தல் ஆணைய அதி​காரி​கள் கூறிய​தாவது: தேர்​தல் விதி​முறை​களின்​படி, வேட்பு மனு தாக்​கல் செய்​வதற்​கான கடைசி நாளில் இருந்து 10 நாட்​களுக்கு முன்பு வரை தகு​தி​யான வாக்​காளர்​கள் பட்​டியலில் சேர உரிமை உள்​ளது.

அதன்​படி, கடந்த அக்​டோபர் 1ம் தேதி வரை​யில் தகு​தி​யான வாக்​காளர்​களின் விண்​ணப்​பங்​கள் பரிசீலிக்​கப்​பட்டு வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்க்​கப்​பட்​டது. அதன்​படி 3 லட்​சம் வாக்​காளர்​களின் பெயர் கூடு​தலாக பட்​டியலில் இடம்​பெற்​றது. அந்த எண்​ணிக்​கை​யை​தான் பிஹார் தேர்​தல் முடிந்த பின்​னர் வெளி​யிட்​டுள்​ளோம். இவ்​வாறு அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x