Published : 17 Nov 2025 06:56 AM
Last Updated : 17 Nov 2025 06:56 AM

உலக வங்கியிடம் பெற்ற ரூ.14 ஆயிரம் கோடி கடனை தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்திய நிதிஷ் அரசு: ஜன் சுராஜ் கட்சி தலைவர் உதய் சிங் குற்றச்சாட்டு 

பாட்னா: உலக வங்​கி​யிடம் பெற்ற ரூ.14 ஆயிரம் கோடியை நிதிஷ் குமார் தலை​மையி​லான அரசு தேர்​தல் வெற்​றிக்​காக பயன்​படுத்தி உள்​ள​தாக ஜன் சுராஜ் கட்சி குற்​றம்​சாட்டி உள்​ளது.

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) அமோக வெற்றி பெற்று ஆட்​சியை தக்​க​வைத்​துக் கொண்​டது. மொத்​தம் உள்ள 243 இடங்​களில் என்​டிஏ 202, மெகா கூட்​டணி 35 இடங்​களில் வெற்றி பெற்​றது. பிர​சாந்த் கிஷோர் தலை​மையி​லான ஜன் சுராஜ் கட்சி படு​தோல்வி அடைந்​தது.

இந்​நிலை​யில் ஜன் சுராஜ் கட்​சி​யின் தேசிய தலை​வர் உதய் சிங் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கடந்த ஜூன் மாதம் முதல் தேர்​தல் அறிவிக்​கப்​படும் வரை, பொது​மக்​களின் வாக்​கு​களை வாங்​கு​வதற்​காக நிதிஷ் குமார் தலை​மையி​லான பிஹார் அரசு ரூ.40 ஆயிரம் கோடி செல​விட்​டுள்​ளது. இது முன் எப்​போதும் இல்​லாத அளவு ஆகும். உலக வங்​கி​யிட​மிருந்து பெற்ற கடனில் ரூ.14 ஆயிரம் கோடி நன்​கொடை மற்​றும் இலவசங்​களுக்​காக திருப்​பி​விட்​டுள்​ளது.

குறிப்​பாக, தேர்​தல் ஆதா​யத்​துக்​காக முதல்​வரின் மகளிர் வேலை​வாய்ப்பு திட்​டத்​தின் கீழ் பெண்​களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்​கப்​படும் என தேர்​தலுக்கு முன்பு அறிவிக்​கப்​பட்​டது. ஆனால் தேர்​தல் நடத்தை விதி​கள் அமலில் இருந்​த​போ​தி​லும், வாக்​குப்​ப​திவு நடை​பெறு​வதற்கு ஒரு நாள் முன்பு வரை​யிலும் அந்த பணம் பெண்​களின் வங்​கிக் கணக்​கில் வரவு வைக்​கப்​பட்​டது. இது பெண்​கள் மத்​தி​யில் தாக்​கத்தை ஏற்​படுத்​தி​யது.

இதனால்​தான் ஆளும் கட்சி வெற்றி பெற்​றது. வாக்​கு​களை வாங்​கு​வதற்​காக பொது​மக்​களின் பணத்​தைப் பயன்​படுத்தி இருக்​கா​விட்​டால், ஆளும் தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யால் ஆட்​சியை தக்க வைத்​திருக்க முடி​யாது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

ஜன் சுராஜ் கட்​சி​யின் மற்​றொரு தலை​வர் பவன் வர்மா கூறும்​போது, "பிஹார் அரசின் கடன் ரூ.4.06 லட்​சம் கோடி​யாக உள்​ளது. இதற்கு ஒரு நாளைக்கு ரூ.63 கோடி வட்டி செலுத்​தப்​படு​கிறது. அரசு கஜானா காலி​யாக உள்​ளது. இந்​நிலை​யில், வளர்ச்சி திட்​டங்​களை மேற்​கொள்​வதற்​காக உலக வங்​கியி​லிருந்து பெற்ற கடனை, மகளிருக்கு ரூ.10 ஆயிரம் கொடுப்​ப​தற்​காக திருப்​பி விடப்​பட்​டுள்​ளது" என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x