Published : 17 Nov 2025 12:35 AM
Last Updated : 17 Nov 2025 12:35 AM

அவதூறாக பேசி காலணியை கழற்றி அடிக்க முயற்சி: தேஜஸ்வி மீது லாலு மகள் பகிரங்க குற்றச்சாட்டு

பாட்னா: ‘‘என்னை அவதூறாக பேசி, காலணியை கழற்றி அடிக்க முயற்சி செய்​தனர்’’ என்று லாலு மகள் ரோகிணி ஆச்​சார்யா தனது சகோ​தரர் தேஜஸ்வி மீது மறை​மு​மாக குற்​றம் சாட்டி உள்​ளார்.

பிஹார் மாநிலத்​தில் ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்​ஜேடி) தலை​வர் லாலு பிர​சாத், ராப்ரி தம்​ப​தி​யருக்கு மிசா பார​தி, ரோகிணி ஆச்​சார்​யா, சாந்தாசிங், ராகிணி யாதவ், ஹேமா யாதவ், அனுஷ்கா யாதவ், தேஜ்பிர​தாப் யாதவ், ராஜலட்​சுமி சிங் யாதவ், தேஜஸ்வி யாதவ் என 9 பிள்​ளை​கள் உள்​ளனர். அனை​வருக்​கும் திரு​மண​மாகி விட்​டது. இதில் மூத்த மகள் மிசா பார​தி, 2-வது மகள் ரோகிணி ஆச்​சார்​யா, மகன்​கள் தேஜ் பிர​தாப் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் அரசி​யலில் உள்​ளனர்.

லாலு​வின் மூத்த மகள் மிசா பாரதி கடந்த 2014-ம் ஆண்​டில் அரசி​யலில் நுழைந்​தார். லாலு​வின் 2-வது மகள் ரோகிணி ஆச்​சார்யா எம்​பிபிஎஸ் படித்​துள்​ளார். திரு​மணத்​துக்​குப் பிறகு அவர் தனது கணவர் ராவ் சமரேஸுடன் சிங்​கப்​பூரில் வசித்து வந்​தார். சிறுநீரக செயலிழப்​பால் பாதிக்​கப்​பட்ட லாலு​வுக்கு கடந்த 2022-ம் ஆண்​டில் ரோகிணி சிறுநீரகத்தை தான​மாக வழங்​கி​னார். இதைத் தொடர்ந்து கடந்த 2024-ம் ஆண்​டில் அவர் பிஹார் அரசி​யலில் கால் பதித்​தார். அந்த ஆண்டு மக்​கள​வைத் தேர்​தலில் சரண் தொகு​தி​யில் போட்​டி​யிட்டு அவர் தோல்​வியை தழு​வி​னார். இதன்​பிறகு அவர் மீண்​டும் சிங்​கப்​பூருக்கு சென்​று​விட்​டார்.

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை ஒட்டி அவர் மீண்​டும் பிஹாருக்கு திரும்பி வந்​தார். இதற்கு தேஜஸ்வி யாதவ் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தார். எனினும் லாலு​வின் சமரசத்​தால் ரோகிணி, பிஹார் தேர்​தலில் அதிதீ​விர​மாக பணி​யாற்​றி​னார். இந்த சூழலில் பிஹார் தேர்​தலில் ஆர்​ஜேடி படு​தோல்வி அடைந்​தது. அந்த கட்சி 143 தொகு​தி​களில் போட்​டி​யிட்ட நிலை​யில் 25 தொகு​தி​களில் மட்​டுமே வெற்றி பெற்​றது. தேர்​தல் தோல்வி தொடர்​பாக ரோகிணி மீது தேஜஸ்வி குற்​றம் சாட்​டிய​தாகக் கூறப்​படு​கிறது.

இதுதொடர்​பாக சமூக வலை​தளத்​தில் ரோகிணி நேற்று முன்​தினம் வெளி​யிட்ட பதி​வில், “நான் அரசி​யலில் இருந்​தும், குடும்​பத்​தில் இருந்​தும் வில​கு​கிறேன். சஞ்​சய் யாத​வும் ரமீஸும் (தேஜஸ்​வி​யின் நண்​பர்​கள்) இதைத்​தான் விரும்​பு​கின்​றனர். எல்லா பழியை​யும் நானே ஏற்​றுக் கொள்​கிறேன்" என்று தெரி​வித்​தார்.

இதைத் தொடர்ந்து ரோகிணி நேற்று வெளி​யிட்ட பதிவு​களில் கூறி​யிருப்​ப​தாவது: நேற்று (சனிக்​கிழமை) ஒரு மகள், சகோ​தரி, மனை​வி, ஒரு தாய் அவம​திக்​கப்​பட்​டாள். மிக​வும் மோச​மான வார்த்​தைகளால் திட்​டப்​பட்​டாள். (தேஜஸ்வி) காலணியை கழற்றி அடிக்​க​வும் முயற்சி செய்​தனர். ஆனால் நான் சுயமரி​யாதையை விட்​டுக் கொடுக்​க​வில்​லை. வேறு வழி​யின்றி நேற்று (சனிக்​கிழமை) கண்​ணீர்​விட்டு நின்ற பெற்​றோரை​யும் சகோ​தரி​களை​யும் விட்டு பிரிந்து வந்​தேன்.

எனது தாய் வீட்​டில் இருந்து என்னை வெளி​யேற்​றி​விட்​டனர். நான் ஆதர​வற்று நிற்​கிறேன். எனது பாதையை வேறு யாரும் தேர்வு செய்ய வேண்​டாம். எந்​தவொரு குடும்​பத்​தி​லும் ரோகிணி போன்ற பெண் பிறக்கக் கூடாது. நான் மோச​மானவள், அழுக்​கானவள் என்று குற்​றம் சாட்​டினர். எனது தந்​தைக்கு (லாலு) சிறுநீரகத்தை கொடுத்​து, கோடிக்​கணக்​கில் பணத்தை பெற்​றுக் கொண்​ட​தாக​வும் தேர்​தலில் சீட்​களை பெற்​றுக் கொண்​ட​தாக​வும் குற்​றம் சுமத்​தினர். திரு​மண​மான அனைத்து பெண்​களுக்​கும் ஓர் அறி​வுரையை கூற விரும்​பு​கிறேன். உங்​கள் வீட்​டில் அண்​ணன், தம்பி இருந்​தால் தவறு​தலாககூட உங்​கள் தந்​தையை காப்​பாற்ற முயற்சி செய்ய வேண்​டாம். தம்​பியோ, அண்​ணனோ அல்​லது அவரது ஹரி​யானா நண்​பரையோ (தேஜஸ்​வி​யின் நண்​பர் சஞ்​சய் யாதவ்) சிறுநீரகத்தை தானம் செய்ய சொல்​லுங்​கள்.

திரு​மண​மான பெண்​கள் அவர​வர் குடும்ப நலன்​களில் மட்​டுமே அக்​கறை செலுத்த வேண்​டும். உங்​கள் கணவர், பிள்​ளை​கள் மீது மட்​டும் அக்​கறை செலுத்​துங்​கள். எனது தந்​தை​யின் குடும்​பத்​துக்​காக எனது 3 பிள்​ளை​களை சரி​யாக கவனிக்​க​வில்​லை. நான் மாபெரும் தவறு செய்​து​ விட்​டேன். எனது கணவர், அவரின் உறவினர்​கள் அறி​வுரையை மீறி எனது தந்​தைக்கு சிறுநீரகத்தை தான​மாக வழங்​கினேன். எனது கணவரின் பேச்சை கேட்​க​வில்​லை. கடவுள் போன்ற எனது தந்​தையை காப்​பாற்ற சிறுநீரகத்தை தான​மாக வழங்​கினேன். அதற்கு நன்​றிக்​கட​னாக என்னை மோச​மானவள் என்று சபிக்​கின்​றனர். நான் செய்த தவறை யாரும் செய்ய வேண்​டாம்​. என்​னைப்​ போன்​ற மகளாக யாரும்​ இருக்​க வேண்​டாம்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x