Published : 16 Nov 2025 07:12 AM
Last Updated : 16 Nov 2025 07:12 AM

லாலு குடும்பத்தில் வெடிக்கும் கோஷ்டி மோதல்: அரசியலில் இருந்து விலகுவதாக மகள் ரோகிணி அறிவிப்பு 

பாட்னா: ​ராஷ்டிரிய ஜனதா தள கட்சியில் இருந்து வில​கு​வ​தாக லாலு​வின் மகள் ரோகிணி பகிரங்​க​மாக அறி​வித்​துள்​ளார்.

ராஷ்டிரிய ஜனதா தள தலை​வர் லாலு பிர​சாத், ரப்ரி தம்​ப​தி​யருக்கு 7 மகள்​கள், 2 மகன்​கள் உள்​ளனர். இதில் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிர​தாப், மிசா பார​தி, ரோகிணி ஆகியோர் அரசி​யலில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

லாலு​வின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் ராஷ்டிரிய ஜனதா தளத்​தின் (ஆர்ஜேடி) அடுத்த தலை​வ​ராக முன்​னிறுத்​தப்​படு​கிறார். இதற்கு லாலு​வின் இதர வாரிசுகள் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்றனர்.

தேஜஸ்வி யாத​வின் வலது கரமாக சஞ்​சய் யாதவ், ரமீஸ் ஆகியோர் செயல்​படு​கின்​றனர். ஆரம்ப காலத்​தில் தேஜஸ்வி யாதவ் கிரிக்​கெட் வீர​ராக இருந்​தார். அவர் டெல்லி டேர்​டெ​வில்ஸ் அணி வீர​ராக இருந்​த​போது ஹரி​யா​னாவை சேர்ந்த சஞ்​சய் யாதவ் அறி​முக​மாகி நண்​ப​ரா​னார். உத்தர பிரதேசத்​தின் பிரபல அரசி​யல் குடும்​பத்தை சேர்ந்த ரமீஸும், மிக நீண்ட கால​மாக தேஜஸ்​வி​யின் நண்​ப​ராக உள்​ளார்.

பிஹார் தேர்​தலின்​போது தேஜஸ்வி தனது ஆதர​வாளர்​களை மட்​டுமே ஆர்​ஜேடி வேட்​பாளர்​களாக நிறுத்த முயற்சி செய்​தார். இதற்கு தேஜ் பிர​தாப், ரோகிணி, மிசா பாரதி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தனர். ஆர்​ஜேடி தலை​வர் லாலு பிர​சாத் தனது மகன்​கள், மகள்​களுக்கு இடையே சமரசம் செய்​தார்.

இந்த சூழலில் தேஜ் பிர​தாப், தனது காதலி அனுஷ்கா யாதவுடன் இருக்​கும் புகைப்​படங்​கள் சமூக வலை​தளங்​களில் வெளி​யாகின. இதை காரணம் காட்டி ஆர்​ஜேடி-​யில் இருந்து தேஜ் பிர​தாப் நீக்​கப்​பட்​டார். இதற்கு தேஜஸ்​வியின் நண்​பர்​கள் சஞ்​சய், ரமீஸ் காரணம் என்று தேஜ் பிர​தாப் பகிரங்​க​மாக குற்​றம் சாட்​டி​னார்.

சிறுநீரக தானம்: சிறுநீரக செயலிழப்​பால் பாதிக்​கப்​பட்ட லாலு பிர​சாத்​துக்கு கடந்த 2022-ம் ஆண்​டில் ரோகிணி தனது சிறுநீரகத்தை தான​மாக வழங்​கி​னார். அப்​போது​ முதல் ஆர்​ஜேடி கட்​சி​யில் ரோகிணி​யின் செல்​வாக்கு உயர்ந்​தது. தனது ஆதர​வாளர்​களுக்​கும் சீட் ஒதுக்க அவர் வலி​யுறுத்​தி​னார். இதற்கு தேஜஸ்வி மறுப்பு தெரி​வித்​தார். இறு​தி​யில் தந்தை லாலு​வின் தலை​யீட்​டால் தனது ஆதர​வாளர்​களை​யும் அவர் வேட்​பாளர்​களாக நிறுத்​தி​னார். நேற்று முன்​தினம் தேர்​தல் முடிவு​கள் வெளி​யான​போது ஆர்​ஜேடி படு​தோல்​வியை தழு​வியது. இதன்​காரண​மாக தேஜஸ்வி ஆதர​வாளர்​கள் ரோகிணி மீது விமர்​சனங்​களை முன்​வைத்​தனர்.

இந்த சூழலில் சமூக வலை​தளத்​தில் ரோகிணி நேற்று வெளி​யிட்ட பதி​வில், “நான் அரசி​யலில் இருந்து வில​கு​கிறேன். எனது குடும்​பத்​தில் இருந்​தும் வில​கிச் செல்​கிறேன். சஞ்​சய் யாத​வும் ரமீஸும் இதைத்​தான் விரும்​பு​கின்​றனர். எல்லா பழியை​யும் நானே ஏற்​றுக் கொள்​கிறேன்’’ என்று தெரி​வித்​துள்​ளார். ரோகிணி​யின் சமூக வலைதள பதி​வால் லாலு பிர​சாத் குடும்​பத்​தில் கோஷ்டி மோதல் உச்​சத்தை எட்​டி​யிருப்​பது வெட்​டவெளிச்​ச​மாகி இருக்​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x