Published : 16 Nov 2025 07:06 AM
Last Updated : 16 Nov 2025 07:06 AM

ஆந்திரா ரூ.13 லட்சம் கோடி முதலீடுகளை பெற்றுள்ளது: முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்

விசாகப்பட்டினம்: ​ஆந்​திர மாநிலம், விசாகப்​பட்​டினத்​தில் கடந்த 2 நாட்​களாக இந்​திய தொழில் கூட்​டாண்மை மாநாடு நடை​பெற்​றது. இதனை குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் தொடங்கி வைத்​தார்.

மாநாட்​டில் இந்​தியா மற்​றும் 72 நாடு​களின் தொழில​திபர்​கள், தலைமை நிர்​வாகி​கள் மற்​றும் இயக்​குநர்​கள் கலந்​து​கொண்​டனர்.நிறைவு நாளான நேற்று முதல்​வர் சந்​திர​பாபு பேசி​ய​தாவது: தொழில் கூட்​டாண்மை மாநாட்​டில் சுமார் ரூ.13 லட்​சம் கோடி வரை ஆந்​தி​ரா​வில் முதலீடு செய்ய தொழில​திபர்​கள் முன் வந்​துள்​ளனர். நாங்​கள் ஆட்​சிக்கு வந்த கடந்த 18 மாதங்​களில் மட்​டும் ரூ.22 லட்​சம் கோடி முதலீடு பெற்​றுள்​ளது.

தடா அருகே உள்ள ஸ்ரீ சிட்​டி​யில் மேலும் 12 புதிய தொழிற்​சாலைகள் அமைய உள்​ளன. இதன் மூலம் 12,365 பேருக்கு வேலை​வாய்ப்பு கிடைக்​கும்.விரை​வில் ஸ்ரீ சிட்​டி​யில் கூடு​தலாக 6 ஆயிரம் ஏக்​கர் நிலம் இணைக்​கப்​படும். 50 நாடு​களின் நிறு​வனங்​கள் இங்கு தொழில் தொடங்க உள்​ளன. கூடிய விரை​வில் இங்கு 1.5 லட்​சம் பேருக்கு வேலை​வாய்ப்பு உரு​வாகும்.இவ்​வாறு அவர் பேசி​னார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x