Published : 16 Nov 2025 07:02 AM
Last Updated : 16 Nov 2025 07:02 AM

சாதி அரசியலை பிஹார் நிராகரித்தது: பிரதமர் நரேந்திர மோடி கருத்து

சூரத்: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் சாதி அரசி​யலை மக்​கள் நிராகரித்து உள்​ளனர். இந்த தேர்​தலில் தோல்​வியை தழு​விய​வர்​கள் பேர​திர்ச்​சி​யில் மூழ்கி உள்​ளனர் என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

பிர்சா முண்​டா​வின் 150-வது பிறந்த தினம் மற்​றும் பழங்​குடி​யினர் கவுரவ தினம் நேற்று கொண்​டாடப்​பட்​டது. இதையொட்டி குஜ​ராத்​தின் நர்​மதா மாவட்​டம், டெடி​யாபடா பகு​தி​யில் உள்ள தேவ​மோக்ரா தேவி கோயி​லில் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று வழிபட்​டார். இந்த கோயில் பழங்​குடி மக்​களின் கோயில் ஆகும்.

பின்​னர் அங்கு நடந்த விழா​வில் ரூ.9,700 கோடி மதிப்​பிலான நலத்​திட்​டங்​களை அவர் தொடங்​கி​வைத்​தார். விழா​வில் பிரதமர் நரேந்திர மோடி பேசி​ய​தாவது: சுதந்​திர போராட்ட காலத்​தில் பழங்​குடி​யின மக்​கள் வீரதீர​மாக போரிட்​டனர். ஆனால் சுமார் 60 ஆண்டு கால காங்​கிரஸ் ஆட்​சிக் காலத்​தில் அவர்​களுக்கு உரிய மரி​யாதை வழங்​கப்​பட​வில்​லை.

பழங்​குடி​யின தலை​வர் பிர்சா முண்டா முழு​மை​யாக புறக்​கணிக்​கப்​பட்​டார். மத்​தி​யில் பாஜக ஆட்​சிக்கு வந்த பிறகு முண்​டா​வின் பிறந்த தினம் பழங்​குடி​யினர் கவுரவ தின​மாக அறிவிக்​கப்​பட்​டது. பழங்​குடி​யின மக்​களின் நலன்​களுக்கு மத்​திய அரசு முன்​னுரிமை அளித்து வரு​கிறது. முன்​னாள் பிரதமர் வாஜ்​பாய் ஆட்​சிக் காலத்​தில் பழங்​குடியினர் நலனுக்​காக தனித் துறை தொடங்​கப்​பட்​டது.

குஜ​ராத்​தில் 2 பழங்​குடி பல்​கலைக்​கழகங்​கள் தொடங்​கப்​பட்டு உள்​ளன. மேலும் குஜ​ராத்​தில் பழங்​குடி​யின மக்​கள் வசிக்​கும் பகு​தி​களில் 10,000 பள்​ளி​கள் திறக்​கப்​பட்டு உள்​ளன. பாஜக சார்​பில் பழங்​குடி​யின மக்​கள் மிக உயர்ந்த பதவி​களில் நியமிக்​கப்​படு​கின்​றனர். பழங்​குடி​யினத்தை சேர்ந்த மோகன் சரண் மாஜி ஒடிசா முதல்​வ​ராக பதவி வகிக்​கிறார். இதே​போல பாஜக ஆளும் பல்​வேறு மாநிலங்​களில் பழங்​குடி​யின மக்​கள் மிக முக்​கிய பதவி​களை வகிக்​கின்​றனர். இவ்​வாறு அவர் பேசி​னார்.

பின்​னர் சூரத்​தில் புல்​லட் ரயில் திட்​டப் பணி​களை பிரதமர் நரேந்​திர மோடி பார்​வை​யிட்​டார். அங்கு நடந்த கூட்​டத்​தில் அவர் பேசி​ய​தாவது: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் சாதி அரசி​யலை மக்​கள் முழு​மை​யாக நிராகரித்து உள்​ளனர். இந்த தேர்​தலில் தோல்​வியை தழு​விய​வர்​கள் பேர​திர்ச்​சி​யில் மூழ்கி உள்​ளனர். தோல்வி அதிர்ச்​சி​யில் இருந்து மீள அவர்​களுக்கு பல மாதங்​கள் ஆகும்.

ஜாமீனில் வெளியே நடமாடும் சில தலை​வர்​கள், வக்பு சட்ட திருத்த சட்ட நகலை கிழித்து எறிந்​தனர். அந்த சட்​டத்தை பிஹாரில் அமல்​படுத்த விட​மாட்​டோம் என்று சபதம் ஏற்​றனர். ஆனால் அவர்​களை மக்​கள் புறக்​கணித்​து, வளர்ச்​சிக்கு ஆதர​வாக வாக்​களித்​துள்​ளனர். பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​டணி வேட்​பாளர்​களுக்​கும், எதிர்க்​கட்​சிகளின் வேட்​பாளர்​களுக்​கும் இடையே 10 சதவீத வாக்​கு​கள் வித்​தி​யாசம் உள்​ளது. இது மிகப்​பெரிய வித்​தி​யாசம். இதன்​மூலம் வரலாற்று சிறப்​புமிக்க வெற்​றியை பெற்​றிருக்​கிறோம். பிஹாரில் வளர்ச்சி திட்​டப் பணி​கள் தொடர்ந்து செயல்​படுத்​தப்​படும். அந்த மாநிலம் அதிவேக​மாக முன்​னேறும்​. இவ்​வாறு பிரதமர்​ நரேந்திர மோடி பேசி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x