Published : 16 Nov 2025 06:57 AM
Last Updated : 16 Nov 2025 06:57 AM

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி: கார்கேவுடன் ராகுல் காந்தி ஆலோசனை

புதுடெல்லி: பிஹார் தேர்​தல் தோல்வி தொடர்​பாக டெல்​லி​யில் நேற்று காங்​கிரஸ் தலைவர் கார்கேவுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார்.

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்​கிரஸ் உள்​ளிட்ட கட்​சிகள் அடங்​கிய மெகா கூட்​டணி படு​தோல்வி அடைந்​திருக்​கிறது. குறிப்​பாக 61 தொகு​தி​களில் போட்​டி​யிட்ட காங்​கிரஸ் 6 தொகு​தி​களில் மட்​டுமே வெற்றி பெற்​றிருக்​கிறது.

இதுதொடர்​பாக டெல்​லி​யில் உள்ள காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கேவுடன் ராகுல் ஆலோசனை நடத்தினார். கார்கே வீட்​டில் நேற்று நடைபெற்ற ஆலோ​சனைக் கூட்​டத்​தில் எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி, கட்​சி​யின் மூத்த தலை​வர்​கள் வேணுகோ​பால், அஜய் மக்​கான் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

கூட்​டத்​தில் அஜய் மக்​கான் பேசும்​போது, “பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் ஆரம்​பம் முதலே நேர்​மை​யாக நடை​பெற​வில்​லை. வாக்கு திருட்​டு, தேர்​தல் முறை​கேடு​களால் பாஜக கூட்​டணி வெற்றி பெற்​றிருக்​கிறது. தேர்​தலில் மிகப்​பெரிய தவறு நடந்​திருக்​கிறது. அடுத்த 2 வாரங்​களில் ஆதா​ரங்​களை சமர்ப்​பிப்​போம்’’ என்று தெரி​வித்​தார். பெரும்​பாலான காங்​கிரஸ் தலை​வர்​கள் இதே குற்​றச்​சாட்டை முன்​வைத்​தனர்.

கூட்​டத்​துக்​குப் பிறகு வேணுகோ​பால் கூறிய​தாவது: பிஹார் தேர்​தல் பல்​வேறு சந்​தேகங்​களை எழுப்​பு​கிறது. தேர்​தல் முறை​கேடு​கள் தொடர்​பான ஆதா​ரங்​களை அடுத்த சில வாரங்​களில் வெளிச்​சத்​துக்கு கொண்டு வரு​வோம். ஒரு தேர்​தலில் 90 சதவீத வெற்றி என்​பது நம்ப முடி​யாத ஒன்​று. இந்​திய வரலாற்​றில் இது​போன்ற வெற்றி பதிவு செய்​யப்​பட​வில்​லை. பிஹார் தேர்​தல்​களி​லும் இது​போன்ற வெற்றி பதி​வாக​வில்​லை. முறை​கேடு​கள் தொடர்​பான ஆதா​ரங்​களை மக்​களிடம் சமர்ப்​பிப்​போம். இவ்​வாறு வேணுகோ​பால் தெரி​வித்​தார்.

சமூக வலை​தளத்​தில் ராகுல் காந்தி வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: பிஹார் தேர்​தலில் மெகா கூட்​டணிக்கு வாக்​களித்த லட்​சக்​கணக்​கான வாக்​காளர்​களுக்கு நன்​றி. பிஹார் தேர்​தல் முடிவு​கள் ஆச்​சரி​யம் அளிக்​கின்றன. ஆரம்​பத்​தில் இருந்தே நேர்​மை​யாக நடை​பெறாத தேர்​தலில் வெற்​றியை பெறமுடிய​வில்​லை. இந்​திய அரசி​யலமைப்பு சட்​டம், ஜனநாயகத்தை காப்​பாற்ற போராடி வரு​கிறோம். தேர்​தல் முடிவு​கள் தொடர்​பாக இண்​டியா கூட்​டணி கட்​சிகள் தீவிர​மாக ஆய்வு செய்​யும். ஜனநாயகத்தை காப்​பாற்​றும் எங்​கள் போ​ராட்​டத்தை தீவிரப்​படுத்​து​வோம்​. இவ்​வாறு ராகுல்​ தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x