Published : 15 Nov 2025 12:02 AM
Last Updated : 15 Nov 2025 12:02 AM

பிஹாரில் தனித்து போட்டியிட்ட ஒவைசி கட்சி 5 இடங்களில் வெற்றி

பாட்னா: பிஹாரில் தனித்​துப் போட்​டி​யிட்ட அசாதுதீன் ஒவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் கட்சி 5 இடங்​களில் வெற்றி பெற்​றது.

பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலில் ஹைத​ரா​பாத் எம்​.பி. அசாதுதீன் ஒவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் கட்​சி, எதிர்க்​கட்​சிகளின் மகா கூட்​ட​ணி​யில் சேர விரும்​பியது. ஆனால் ஆர்​ஜேடி தலை​வர் தேஜஸ்வி யாதவுக்கு இதில் விருப்​பம் இல்​லாத​தால் கூட்​டணி ஏற்​பட​வில்​லை.

இண்​டியா கூட்​டணி தலை​வர்​கள் மூலம் தேர்​தல் கூட்​ட​ணி​யில் இணைய பலமுறை ஒவைசி முயற்​சித்​தார். ஆனால் யாரும் கண்​டு​கொள்​ள​வில்​லை. இதனால் அதிருப்தி அடைந்த ஒவைசி பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலில் சீமாஞ்​சல் பகு​தி​யில் 14 இடங்களில் தனித்​துப் போட்​டி​யிட்​டார். இந்​நிலை​
யில் இவரது கட்சி அமவுர், பகதூர்​கஞ்ச், கோச்​சதமன், ஜோகிஹட், பைசி ஆகிய 5 தொகு​தி​களில் வெற்றி பெற்​றுள்​ளது.
பிஹாரில் முதல்​முறை​யாக கடந்த 2015 சட்​டப்​பேரவை தேர்​தலில் ஒவைசி கட்சி போட்​டி​யிட்​டது. அப்​போது கிஷான்​கஞ்ச் தொகு​தி​யில் வெற்றி பெற்​றது. இதையடுத்து 2020 சட்​டப்​பேரவை தேர்​தலில் இவரது கட்சி 5 இடங்​களில் வென்று எதிர்ப்​பாளர்​களை
ஆச்​சரியப்​படுத்​தி​யது.

ஆர்ஜேடிக்கு தாவல்: எனினும் அவரது கட்​சி​யின் 4 எம்​எல்​ஏக்​கள் 2022-ல் ஆர்​ஜேடிக்கு தாவினர். அப்​போது ஏஐஎம்​ஐஎம் கட்​சி​யின் பிஹார் தலை​வர் அக்​தருல் இமான், “எங்​கள் எம்​எல்​ஏக்​களை நீங்​கள் எடுத்​துக் கொள்​ளலாம். ஆனால் எங்​கள் ஆதர​வாளர்​களை எடுத்​துக்​கொள்ள முடி​யாது" என்​றார். அது​போலவே 2025 தேர்​தலில்​ 5 இடங்​களில்​ ஏஐஎம்​ஐஎம்​ கட்​சி வெற்​றி பெற்​றுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x