Published : 14 Nov 2025 08:38 AM
Last Updated : 14 Nov 2025 08:38 AM
புதுடெல்லி: டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட மருத்துவர்கள் ‘திரீமா’ என்ற சுவிஸ் செயலியைப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
டெல்லி கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய மருத்துவர்கள் உமர் நபி, முஜம்மில், ஷாகின் ஆகியோர் திட்டமிட்டு இந்த சதி செயலில் ஈடுபட்டுள்ளனர். இதில் உயிரிழந்த உமர் பரிதாபாத்தில் இருந்து டெல்லி செங்கோட்டை வரை காரில் சென்றது, பல்வேறு சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது.
மேலும், இந்த 3 பேரும் சுவிட்சர்லாந்தின் ‘திரீமா’ செயலியைப் பயன்படுத்தி சதி திட்டம் தொடர்பாக கலந்துரையாடி உள்ளனர். இந்த செயலி பாதுகாப்பானதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT