Last Updated : 14 Nov, 2025 08:18 AM

 

Published : 14 Nov 2025 08:18 AM
Last Updated : 14 Nov 2025 08:18 AM

ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களின் 500 இடங்களில் என்ஐஏ சோதனை

புதுடெல்லி: டெல்லி செங்​கோட்டை அருகே நடை​பெற்ற கார் வெடிகுண்டு தாக்​குதல் குறித்து ஜம்மு காஷ்மீர், ஹரி​யா​னா, உத்தர பிரதேசம் உள்​ளிட்ட மாநிலங்​களில் 500-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) திடீர் சோதனை நடத்​தி​யது.

பாகிஸ்​தான் ஆதரவு ஜெய்ஷ் இ முகமது அமைப்​பின் தீவிர​வா​தி​களாக மாறிய மருத்​து​வர்​கள் குறித்து முக்​கிய விசா​ரணை​கள் நடை​பெறுகின்​றன. குண்​டு​வெடிப்​புக்கு முன்​பாக பரி​தா​பாத்​தில் கைதான 3 மருத்​து​வர்​கள் உட்பட 8 பேரிடம் விசா​ரணை தொடர்​கிறது. இவர்​களில் டாக்​டர் முஜாம்​மில் ஷகீலின் வாடகை வீட்​டில் கைப்​பற்​றப்​பட்ட சுமார் 3,000 கிலோ வெடி பொருட்​கள் உட்பட அனைத்து ஆதா​ரங்​களும் என்​ஐஏ​விடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளன. இவை வாங்​கப்​பட்ட இடமும் கண்​டு​பிடிக்​கப்​பட்​டுள்​ளது.

இதில் அம்​மோனி​யம் நைட்​ரேட்டை டாக்​டர் முஜாம்​மில், ஹரி​யா​னா​வின் பிங்​க​வானில் வாங்கி உள்​ளார். இதை அவருக்கு டப்பு சிங்லா எனும் உரம் மற்​றும் விதை விற்​பனை​யாளர் அதிக லாபத்​துக்கு கொடுத்​துள்​ளார். என்ஐஏ சோதனை​யில் சிக்​கிய சிங்​லா​விடம் தீவிர விசா​ரணை நடை​பெறுகிறது. இதற்​கிடை​யில், வெடிபொருட்​கள் வேறு சில இடங்​களி​லும் வைக்​கப்​பட்​டிருக்​கலாம் என்ற சந்​தேகம் எழுந்​துள்​ளது.

டாக்​டர் முஜாம்​மில், டாக்​டர் ஆதீல், டாக்​டர் உமர் மற்​றும் டாக்​டர் ஷாஹீன் சயீத் ஆகியோர் இணைந்து தீவிர​வாதத்​துக்​காக ரூ.20 லட்​சம் ரொக்​க​மாகத் திரட்​டி​யுள்​ளனர். இதை அவர்​களுக்கு நிதி​யாக அளித்​தவர்​கள் யார் எனவும் விசா​ரிக்​கப்​படு​கிறது. இந்த பணம் டெல்லி குண்​டு​வெடிப்​புக்கு முன்​பாக டாக்​டர் உமரின் பொறுப்​பில் இருந்​துள்​ளது. இந்த தொகை​யில் ஹரி​யா​னா​வின் குரு​கி​ராம், நுஹ் மற்​றும் அரு​கிலுள்ள பகு​தி​களில் இருந்து ரூ.3 லட்​சத்​துக்கு நைட்​ரஜன், பாஸ்​பரஸ் மற்​றும் பொட்​டாசி​யம் வாங்​கப்​பட்​டுள்​ளது. இவற்றை ஐஇடி வெடிபொருள் தயாரிக்​கும் நோக்​கில் மருத்​து​வர்​கள் வாங்கி உள்​ளனர்.

அயோத்தியில் தாக்குதல்.. இவற்றை வாங்​கிய​தில் உமர் மீது முஜாம்​மிலுக்கு சந்​தேகம் எழுந்​துள்​ளது. இதுகுறித்து இரு​வருக்​கும் இடை​யில் மோதல் ஏற்​பட்​ட​தால் ஜெய்ஷ் தீவிர​வாத அமைப்​பின் தாக்​குதல் திட்​டம் திடீரென மாற்​றப்​பட்​டுள்​ளது.

மேலும், பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6-ம் தேதி, உ.பி.யின் அயோத்தியில் தாக்குதல் நடத்த சில முக்கிய இடங்கள் தேர்வாகி இருந்தன. சுமார் 8 தீவிரவாதிகள் 4 நகரங்களில் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்த திட்டமிட்டது தெரிய வந்துள்ளது.

இவர்கள், 2 குழுக்களாக பிரிந்து கார்களிலேயே வெடிபொருட்களை எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால், உமர் - முஜாம்மில் இடையே ஏற்பட்ட மோதலால் டெல்லியில் கார் வெடித்து சிதறி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x