Published : 14 Nov 2025 07:30 AM
Last Updated : 14 Nov 2025 07:30 AM

கான்பூர் மருத்துவரிடம் உ.பி. போலீஸார் விசாரணை

கான்பூரில் பணியாற்றிய ஆரிப் மிர் குறித்து அவருடன் தங்கியிருந்த மருத்துவர் அபிஷேக் பட்நாயக் மற்றும் சக மருத்துவர்கள் நேற்று பேட்டியளித்தனர்.

கான்பூர்: டெல்லி குண்​டு​வெடிப்பு வழக்கு தொடர்​பாக கான்​பூரைச் சேர்ந்த மருத்​து​வரைப் பிடித்து உத்​தரபிரதேச மாநில போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

டெல்லி செங்​கோட்டை அருகே கடந்த 10-ம் தேதி காரில் குண்டு வெடித்​த​தில் 13 பேர் உயி​ரிழந்​தனர். இந்த வழக்கை விசா​ரித்து வரும் தேசிய விசா​ரணை முகமை(என்​ஐஏ) போலீ​ஸார் பலரைப் பிடித்து விசா​ரித்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில் டெல்லி குண்​டி​வெடிப்​புடன் தொடர்​புடைய​தாக உத்​தரபிரதேச மாநிலம் கான்​பூரைச் சேர்ந்த ஜிஎஸ்​விஎம் மருத்​து​வக் கல்​லூரி​யில் பயின்று வரும் டாக்​டர் முகமது ஆரிப்​பை(32) தீவிர​வாத எதிர்ப்​புப் படை போலீ​ஸார் பிடித்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

இவர் எம்​பிபிஎஸ் படித்து முடித்த நிலை​யில், மருத்​துவ மேல்​படிப்​பு(​கார்​டி​யாலஜி) படித்து வரு​கிறார். அவரது செல்​போன், லேப்​டாப் உள்​ளிட்​ட​வற்றை போலீ​ஸார் பறி​முதல் செய்து ஆய்வு செய்து வரு​கின்​றனர்.

இந்த வழக்​கில் கைது செய்​யப்​பட்​ட​வர்​களுக்​கும் இவருக்​கும் தொடர்​புடைய​தாக போலீ​ஸார் தெரி​வித்​துள்​ளனர். டாக்​டர் முகமது ஆரிப், ஜம்​மு-​காஷ்மீரின் அனந்த்​நாக் பகு​தி​யைச் சேர்ந்தவர். இந்த வழக்​கில் ஏற்​கெனவே கைது செய்​யப்​பட்​டுள்ள டாக்​டர் ஷாஹீன் சயீதுடன் இவர் நெருங்​கிய தொடர்​பில் இருந்​துள்​ளார்.

மேலும் டெல்லி செங்​கோட்டை குண்​டு​வெடிப்பு சம்​பவம் நடந்​த​போது, டாக்​டர் ஷாஹீனுடன் தொடர்​பில் உள்​ளவர்​களு​டன் டாக்​டர் ஆரிப் செல்​போனில் பேசி வந்​துள்​ளதும் தெரிய​வந்​துள்​ளது. இவர் தற்​போது டெல்​லிக்​குக் கொண்டு வரப்​பட்டு விசா​ரிக்​கப்​பட்டு வரு​கிறார்.

வீட்டு மாடி​யில் மனித கை: டெல்லி செங்​கோட்டை அருகே குண்​டு​வெடிப்பு சம்​பவம் நடந்த 4 நாட்​களான நிலை​யில் நேற்று மனிதக் கை ஒன்று குண்டு வெடித்த இடத்​தில் கிடைத்​துள்​ளது.

குண்​டு​வெடித்த இடம் அருகே உள்ள ஜெயின் கோயிலுக்கு பின்​புற​முள்ள ஒரு வீட்​டின் மேற்பகு​தி​யில் இருந்து இந்த சிதில​மான கை கண்​டெடுக்​கப்​பட்​டது. இதையடுத்து என்ஐஏ அதி​காரி​கள் அதைக் கைப்​பற்​றி, ஆய்​வகத்​துக்கு அனுப்பி வைத்​துள்​ளனர். அந்த கை யாருடையது என்​பது குறித்து தடய​வியல் அறி​வியல் நிபுணர்​கள் ஆய்வு செய்து வரு​கின்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x