Published : 14 Nov 2025 07:21 AM
Last Updated : 14 Nov 2025 07:21 AM

அல் பலா கல்லூரியில் இருந்த காரை கைப்பற்றி விசாரணை

புதுடெல்லி: டெல்லி செங்​கோட்டை அருகே தீவிர​வாதி டாக்​டர் உமர் காருடன் வெடித்து சிதறியது குறித்து தொடர்ந்து பல திடுக்​கிடும் தகவல்​கள் வெளி​யாகி வரு​கின்​றன.

உமர் ஓட்​டிய ஹுண்​டாய் ஐ20 காருடன் சிவப்பு நிற ஈகோ ஸ்பாட் எனும் போர்டு நிறு​வனத்​தின் காரும் நேற்​று​முன்​தினம் சிக்​கியது. இந்​நிலை​யில், நேற்று மூன்றாவ​தாக மாருதி பிரஸ்ஸா வகை கார் சிக்​கி​யுள்​ளது. இமாச்​சலப் பிரதேச பதிவு எண் கொண்ட இந்த கார், தீவிர​வாத மருத்​து​வர்​கள் பணி​யாற்​றிய ஹரி​யா​னா​வின் அல் பலா மருத்​து​வக் கல்​லூரி​யில் வாக​னங்​கள் நிறுத்​து​மிடத்​தில் சுற்​றிவளைக்​கப்​பட்டது. இந்த காரை​யும் டெல்லி போலீ​ஸார், என்ஐஏ உதவி​யுடன் தீவிர சோதனை நடத்​தினர். டெல்​லி​யில் குண்​டு​வெடிப்பு நடத்​திய பிறகு இந்த காரில் தீவிர​வாதி டாக்​டர் உமர் தப்பி செல்ல திட்​ட​மிட்​டிருந்​த​தாக கூறப்​படு​கிறது.

எனவே, தீவிர சோதனைக்​காக தற்​காலிகமாக அல் பலா பல்​கலைக்​கழகத்​துக்​குள் யாரை​யும் உள்​ளே, வெளியே அனு​ம​திக்​க​வில்​லை. இரண்​டாவ​தாக சிக்​கிய சிவப்பு நிற காரை ஓட்டி வந்​தவர் காஷ்மீரை சேர்ந்த பயீம் என்று அடை​யாளம் காணப்பட்​டுள்​ளது. இவர் டாக்டர் உமரின் உறவினர். இவரிட​மும் தீவிர விசா​ரணை நடை​பெறுகிறது. இந்த காரும் டாக்​டர் உமர் பெயரில் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. ஆனால், டெல்​லி​யின் சீலாம்​பூர் பகுதி முகவரி கொடுக்​கப்​பட்​டுள்​ளது.

விசா​ரணை​யில், அல் பலா மருத்​து​வக் கல்​லூரி​யின் 2 மாணவர்​கள், சீலாம்​பூரைச் சேர்​தவர்​கள் என்​பது தெரிய வந்​துள்​ளது. கல்​லூரி விடு​தி​யில் தங்​கி​யுள்ள இவர்​கள், உமர் நபி​யுடன் தொடர்​பில் இருந்​துள்​ளனர். நேற்று முன்தினம் 2 மாணவர்​களும் விசா​ரணைக்​காக அழைத்​துச் செல்​லப்​பட்​டனர். மேலும், டெல்​லி​யில் வெடித்​தது போல் நாடு முழு​வ​தி​லும் 32 கார்​களை தயார் செய்து தாக்​குதல் நடத்த தீவிர​வாத மருத்​து​வர்​கள் திட்​ட​மிட்​ட​து தெரியவந்துள்ளது

2 மவுலா​னாக்​கள்: டெல்லி குண்​டு​வெடிப்பு வழக்​கில் ஹரி​யா​னா​வின் நூ மாவட்​டத்​தின் சிங்​கார் கிராமத்​தில் மவுல்வி ஹாபீஸ் முகமது இஷ்​தி​யாக் என்​பவர் விசா​ரணை வளை​யத்​தில் உள்​ளார். அல் பலா பல்​கலைக்​கழக வளாகத்​தில் உள்ள மசூ​தி​யில் இவர் பல ஆண்​டு​களாக மவுலா​னா​வாக பணி​யாற்​றுகிறார். இதே வழக்​கில் என்​ஐஏ, மகா​ராஷ்டி​ரா​வின் தானே மாவட்​டம் மும்​ப​ரா​வில் ஓய்வு பெற்ற பேராசிரியர் இப்​ராஹிம் ஆபிதி என்​பவரும் சிக்​கி​யுள்​ளார். இவரது வீட்​டில் சோதனை நடத்தி அவரது கைப்​பேசி, மடிக்​ கணினி உள்​ளிட்​ட​வற்​றை கைப்​பற்​றி வி​சா​ரணை நடத்​தி வருகின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x